districts

img

புலவர் லெ.மாரிமுத்து முதலாமாண்டு நினைவஞ்சலி

புதுக்கோட்டை,  மே 17 - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்  கட்சியின் தீவிர உறுப்பின ராகவும், தமிழ்நாடு விவசா யிகள் சங்கம், அகில இந்திய விவசாயத் தொழிலா ளர் சங்கங்களில் திறம்படப் பணியாற்றிய புலவர் லெ. மாரிமுத்துவின் முதலா மாண்டு நினைவஞ்சலி, படத்திறப்பு விழா திங்கள் கிழமை நடைபெற்றது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கறம்பக்குடி வடக்கு ஒன்றியச் செயலா ளர் பி.வீரமுத்து தலைமை வகித்தார். தோழர் லெ. மாரிமுத்துவின் படத்தை திறந்து வைத்து கந்தர்வ கோட்டை தொகுதி சட்டப் பேரவை உறுப்பினர் எம்.சின்னத்துரை புக ழஞ்சலி உரையாற்றினார். கட்சிக் கொடியை மாவட்டச் செயலாளர் எஸ்.கவிவர்மன் ஏற்றினார். விவசாயிகள் சங்க மாவட் டச் செயலாளர் எஸ்.பொன்னுச்சாமி, சிபிஎம் மாவட்ட செயற்குழு உறுப்பி னர்கள் ஏ.ஸ்ரீதர், த.அன்பழ கன், சு.மதியழகன், மாவட் டக்குழு உறுப்பினர் வி.துரைச் சந்திரன், அதிமுக முன்னாள் ஒன்றியச் செயலாளர் எம்.சண்முகம், வட்டாட்சியர் த. சுகுமார், அறிவியல் இயக்க  நிர்வாகிகள் அ.மணவாளன், எம்.வீரமுத்து, எம்.முத்துக் குமார் உள்ளிட்டோர் பேசி னர். கவிஞர் நா.முத்து நிலவன் தலைமையில் பட்டி மன்றம் நடைபெற்றது.

;