districts

குழந்தை திருமணம் செய்து பாலியல் வன்கொடுமை செய்தவருக்கு ஆயுள் தண்டனை

புதுக்கோட்டை, செப்.27 - 16 வயது சிறுமியை கடத்திச் சென்று குழந்தை திருமணம் செய்து பாலியல் வன்கொடுமை செய்த நபருக்கு ஆயுள் தண்டனையும், ரூ.,2.50 லட்சம் அபராதமும் விதித்து புதுக்கோட்டை மகளிர் நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை தீர்ப்பளித்தது.  புதுக்கோட்டை மாவட்டம் பொன்னம ராவதி வார்பட்டு பகுதியைச் சேர்ந்தவர் கணே சன் (36). இவருக்கு திருமணமாகி நான்கு வயதில் ஒரு ஆண் குழந்தை உள்ளது. இந்நிலையில் இவர் கடந்த 2021 ஜுன் மாதம்  அதே பகுதியைச் சேர்ந்த 16 வயது சிறுமியை  கடத்திச் சென்று குழந்தை திருமணம் செய்து  வலுக்கட்டாயமாக பலமுறை பாலியல் வன் கொடுமை செய்துள்ளார். இதுகுறித்து சிறுமியின் பெற்றோர் பொன் னமராவதி காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் அடிப்படையில், கணேசனை போலீ சார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிந்து  கைது செய்தனர். இந்நிலையில், இந்த வழக்கானது புதுக்கோட்டை மகளிர் நீதி மன்றத்தில் நடைபெற்று வந்தது. இதனை யடுத்து வழக்கை விசாரணை செய்த நீதிபதி  சத்யா, குற்றம் உறுதி செய்யப்பட்டதால் கணேசனுக்கு ஆயுள் தண்டனையும், ரூ.2.50  லட்சம் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார். மேலும் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு தமிழக அரசு சார்பில் ரூ.6 லட்சம் நிவாரணம் வழங்க வும் உத்தரவிட்டார். இதனையடுத்து குற்ற வாளி கணேசன் திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

;