புதுக்கோட்டை, ஜூலை 13- சாதிஆணவப் படுகொலை களைத் தடுக்க தனிச்சட்டம் தேவை என்றார் ஜனநாயக மாதர் சங்கத் தின் அகில இந்தியப் பொதுச் செய லாளர் மரியம் தாவ்லே.
அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் மத்தியக்குழு கூட்டம் ஜூலை 12இல் துவங்கி 14 வரை புதுக்கோட்டையில் நடைபெறு கிறது.
கூட்டத்திற்கு இடையே சங்கத் தின் பொதுச் செயலாளர் மரியம் தாவ்லே, தலைவர் பி.கே.ஸ்ரீமதி, அகில இந்திய துணைத் தலைவர் உ.வாசுகி ஆகியோர் சனிக்கிழமை கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது அவர்கள் தெரிவித்ததாவது:
மரியம் தாவ்லே:
பெண்களின் சமத்துவம், கண்ணி யமான வாழ்வுக்கு ஜனநாயக மாதர்சங்கம் நீண்ட நெடிய போராட்டத்தை நடத்தி வருகிறது. வறுமை, வேலையின்மை காரண மாக பெண்கள் துயரமான வாழ்க் கைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.
கந்துவட்டிக்கு கடன் வாங்கி யுள்ள பெண்கள் கடுமையான பொரு ளாதார நெருக்கடியில் சிக்கியுள்ள னர். கடனை திருப்பிச் செலுத்த முடி யாத பெண்கள் பாலியல் ரீதியான துன்புறுத்தலுக்கும் உள்ளாகி வரு கின்றனர். இதுகுறித்து நாடு முழு வதும் 10 ஆயிரம் பெண்களிடம் ஆய்வு நடத்த உள்ளோம். இதைத் தடுக்க மாவட்ட ஆட்சியர் அலுவல கங்களில் உதவி மையங்களை அமைக்க வேண்டும். கடன்கொ டுக்கும் நுண்நிதி நிறுவனங்களை ஒழுங்குபடுத்த வேண்டும். பெண்கள் இதிலிருந்து மீள்வதற்கு குறைந்த வட்டியில் கடன் கொடுப்பதை அரசு உத்தரவாதப்படுத்த வேண்டும்.
மருத்துவத்துறையில் நடை பெறும் நீட் தேர்வு உள்ளிட்ட முறை கேடுகளைக் கண்டித்தும், அரசின் கையில் மட்டுமே மருத்துவத்துறை இருக்க வேண்டுமென வலியுறுத்தி யும் ஜூலை 23-ல் ‘அனைவருக்கும் ஆரோக்கியம் பெறும் உரிமை’ என்ற கோரிக்கைகளை முன்வைத்து நாடுதழுவிய இயக்கம் நடத்த வுள்ளோம்.
பாலஸ்தீன ஒருமைப்பாட்டுக்கு ஆதரவு தெரிவித்தும், வறுமையே வெளியேறு, வேலையின்மையே வெளியேறு என்ற முழக்கத்தை முன்வைத்தும் ஆகஸ்ட் 6, 9, 15 தேதிகளில் மாதர் சங்கத்தின் சார்பில் நாடு தழுவிய அளவில் இயக்கங்களை நடத்தவுள்ளோம்.
தமிழக முதல்வரை சந்திப்போம்
சாதி ஆணவக் கொலைகளைத் தடுக்க தனிச் சட்டம் தேவையில்லை என தமிழ்நாடு முதலமைச்சர் அறி வித்திருப்பது ஏமாற்றம் அளிக்கி றது. தனிச்சட்டம் தேவை என்பதே எங்கள் சங்கத்தின் கருத்து. இது குறித்து சங்கத்தின் சார்பில் ஒரு தூதுக்குழுவாகச் சென்று முதல மைச்சரை சந்திக்க உள்ளோம். சமத்துவமின்மை, சாதியப் பாகு பாடுகளை களைவதற்கென்று தமிழ்நாட்டில் கலைஞர் ஆட்சிக் காலத்தில் சமூக சீர்திருத்தத் துறை இருந்தது. அந்தத் துறையை மீண்டும் தொடங்க வேண்டும் என்றார்.
பி.கே.ஸ்ரீமதி
உத்தரப்பிரதேச மாநிலத்தில் போலே பாபா ஆசிரமத்தில் நூற்றுக் கும் மேற்பட்டவர்கள் பலியாகிய சம்பவம் அதிர்ச்சியளிக்கிறது. மூட நம்பிக்கைக்கு எதிராக தனிச் சட்டம் தேவை என்பதையே இது உணர்த்துகிறது. மேலும், மூட நம்பிக்கைக்கு எதிராகவும், சமத்து வத்தை ஆதரித்தும், சிறுபான்மை யினர் வெறுப்பு, சாதிய வன்கொடுமைகளுக்கு எதிராகவும் பிரச்சாரம் தேவை. ஒன்றிய அரசின் மனுஸ்மிருதி கொள்கையினால் இஸ்லாமிய, தலித் பெண்கள் கடு மையான வன்முறைக்கு உள்ளாகி வருகின்றனர் என்றார்.
உ.வாசுகி
கள்ளக்குறிச்சி சம்பவம் குறித்த செய்தியாளர்களின் கேள்வி க்குப் பதிலளித்த அகில இந்திய துணைத் தலைவர் உ.வாசுகி, கள்ளச் சாராயத்தை உறுதியாக மாதர் சங்கம் எதிர்த்துப் போராடி வரு கிறது. ஒரே நேரத்தில் அனைத்து டாஸ்மாக் கடைகளையும் மூடுவது எதிர்விளைவுகளையே ஏற்படுத்தும். கடைகளை படிப்படியாக குறைக்க வேண்டும். திறந்திருக்கும் நேரத்தையும் குறைக்க வேண் டும். கல்வி நிலையங்கள், கோவில்க ளுக்கு அருகில் உள்ள கடைகளை உடனடியாக மூட வேண்டும். ஒரு இடத்தில் டாஸ்மாக் கடையை மூடிவிட்டு அதற்குப் பதிலாக மனமகிழ் மன்றங்கள் என்ற பெயரில் தனியார் மதுபானக் கூடங்களை திறப்பதையும் மாதர் சங்கம் கடுமையாக எதிர்க்கிறது. குடிநோயாளிகளுக்கான சிகிச்சை மையங்களை ஏற்படுத்த வேண்டும்.
கள்ளச்சாராயத்தில் இறந்து போனவர்களுக்கு வழங்கப்பட்ட நிவாரணத் தொகையை கொச்சைப் படுத்துவதை ஏற்க முடியாது. பாதிக்கப்பட்ட அனைவரும் ஏழைக் குடும்பத்தை சேர்ந்தவர்கள்.
போதைக்கு ஆண், பெண் வித்தியாசம் கிடையாது. முறையாக கல்வி, வேலையின்மை போன்ற காரணங்கள் போதைப் பழக்கத்தை நோக்கித் தள்ளுகிறது. 18 வயதுக்கு உட்பட்ட வயதினர் போதைப் பழக்கத் திற்கும், சாதி, மதப் பற்றுதலுக்கும் அடிமையாகி வருவது வேதனைக் குரியது. இதிலிருந்து அவர்களை மீட்டெடுக்க அரசு உறுதியான நட வடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.
பேட்டியின் போது சங்கத்தின் மாநிலத் தலைவர் எஸ்.வாலண்டி னா, பொதுச் செயலாளர் ஏ.ராதிகா, புதுக்கோட்டை மாவட்டத் தலைவர் எஸ்.பாண்டிச்செல்வி, செயலாளர் பி.சுசிலா உள்ளிட்டோர் உடனி ருந்தனர்.