districts

img

இடையார் கிராமத்தில் மாட்டுவண்டி எல்கைப் பந்தயம்

அறந்தாங்கி, ஜூன் 25- புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே இடையார்  கிராமத்தில் உள்ள குருந்துடைய  அய்யனார் கோவில் சந்தன காப்பு உற்சவத்தையொட்டி 42 ஆவது ஆண்டு மாட்டுவண்டி எல்கைப் பந்தயம் நடைபெற்றது.

பந்தயத்தில் பெரியமாடு, நடு மாடு, கரிச்சான் மாடு, பூஞ்சிட்டு மாடு, தேன்சிட்டு மாடு என 5 பிரிவுகளாக நடைபெற்ற போட்டியில் திருச்சி, மதுரை, தஞ்சை, இராமநாதபுரம், சிவகங்கை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களிலிருந்து கொண்டு வரப்பட்ட நூற்றுக்கும் மேற்பட்ட இரட்டை மாட்டு வண்டிகள் போட்டியில் கலந்து கொண்டன.

ஒவ்வொரு பிரிவு போட்டியிலும் முதல் மூன்று இடங்களை பிடித்து, வென்ற மாட்டு வண்டி உரிமையாளர்களுக்கு ரூ.3.98 லட்சம்  ரொக்கப் பரிசும் கோப்பைகளும் வழங்கப் பட்டன.