districts

img

‘சுற்றுச்சூழலைப் பாதுகாப்பதில் பறவைகளின் பங்கு முக்கியமானது’ ஆய்வாளர் கிருபா நந்தினி

புதுக்கோட்டை,ஜூலை 31- சுற்றுச்சூழலைப் பாதுகாப்பதில் பறவைகளின் பங்கு முக்கியமானது என்றார் பறவைகள் ஆராய்ச்சியாளர் கிருபா நந்தினி.

புதுக்கோட்டை மாவட்ட நிர்வாக மும் தமிழ்நாடு அறிவியல் இயக்கமும் நடத்தும் 7-ஆவது புத்தகத் திருவிழா வின் 4-ஆம் நாளான செவ்வாய்க்கிழ மை பள்ளி மாணவர்களுக்கான காலை அமர்வில் ‘பறவைகள் பலவிதம்’ என்ற தலைப்பில் அவர் மேலும் பேசியது;

உணவுச் சங்கிலியில் அனைத்து படி நிலையிலும் அனைத்து விதமான வாழ்விடங்களிலும் உள்ள இனம் பற வைகள். சுற்றுச்சூழலை சமநிலைப் படுத்த பறவைகள் பங்கு மிக அதிகம். புறா போன்ற பறவைகள் பழங்களை உண்டு விதைப் பரவல் செய்து காடு களை உருவாக்குகின்றன. இரட்டை வால் குருவி, பஞ்சுருட்டான், தகை விலான் போன்ற பறவைகள்  பூச்சிகளை உண்டு அவற்றின் எண்ணிக்கையை கட்டுப்படுத்துகின்றன.

நாம் குப்பைகளில் போடும் கழிவு களை உட்கொள்ளும் காகமும் காடு களில் இறக்கும் விலங்குகளை உட்கொள்ளும் பாருக் கழுகுகளும் காடுகளின் துப்புரவாளர்களாகவே செயல்படுகின்றன. மனிதச் செயல்பா டுகளால் பறவைகளின் வாழ்விடங்கள் அழிக்கப்படுவதுடன்; தவறான தகவல்களும் மூடநம்பிக்கைகளும் பரப்பப்படுவதால் பறவைகளின் மீதான எதிர்மறை எண்ணங்கள் மக்கள் மத்தியில் நிலவுகின்றன.

பறவைகளின் வாழ்விடங்கள், உணவு, இனப்பெருக்கம் மற்றும் சூழ லைப் பாதுகாப்பதில் அவற்றின் பங்கு போன்றவற்றை தெரிந்துகொண்டால் அவற்றை அழிக்காமல் இருப்போம். சமூக வலைத் தளத்தில் பரவும் தவறான தகவல்களை கேள்வி கேட்போம். நமது சுற்றுச்சூழலைப் பாதுகாத்திட எதிர்கால தலைமுறையினருக்கான இயற்கையை அவர்களுக்காக எவ்வித சேதமும் இன்றி விட்டுச் செல்ல இயற்கை குறித்தும் சுற்றுச்சூழல் குறித்தும் நம்முடைய வாசிப்பை மேம்படுத்த வேண்டும்.  இவ்வாறு அவர் கூறினார்.

நிகழ்ச்சிக்கு கே.ஏ.சுப்பிரமணியன் தலைமை வகித்தார். அறிவியல் இயக்க த்தின் மாநிலச் செயலர் எஸ்.டி. பால கிருஷ்ணன் ஒருங்கிணைத்தார். அறி வியல் இயக்க நிர்வாகிகள் அ.மண வாளன், எஸ்.பிரபாகரன், கி.ஜெயபா லன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.