புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி பேரூராட்சி சார்பில் நகரின் தூய்மை பணிக்கான மக்கள் இயக்க செயல்பாடுகள் குறித்த விழிப்புணர்வு பேரணியை பேரூராட்சித் தலைவர் சுந்தரி அழகப்பன் கொடியசைத்து தொடங்கி வைத்தார். விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தி பேரூராட்சி அலுவலகத்திலிருந்து புறப்பட்டு பேருந்து நிலையம், அண்ணா சாலை உள்ளிட்ட முக்கிய சாலை வழியே சென்று காந்திசிலை அருகே நிறைவு செய்தனர்.