பொன்னமராவதி, நவ.25- புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் பள்ளிக்கல்வித்துறை சார்பில் கலைத் திருவிழா நடைபெற்றது. தலைமையாசிரியர் நிர்மலா தலைமையில் வட்டார கல்வி அலுவலர் ராமதிலகம், வட்டார வள மேற்பார்வை யாளர் நல்லநாகு ஆகியோர் முன்னிலையில் தொடங்கி யது. இரண்டு நாட்களாக நடைபெற்ற விழாவில் பள்ளி யின் சார்பில் மாணவிகளுக்கு போட்டிகள் நடை பெற்றன. பொன்னமராவதி பேரூராட்சி தலைவர் சுந்தரி அழகப்பன், வார்டு கவுன்சிலர் புவனேஸ்வரி காளிதாஸ், பள்ளி தலைமையாசிரியர் நிர்மலா உள்ளிட்டோர் போட்டி யில் வெற்றி பெற்ற மாணவிகளுக்கு சான்றிதழ்களை வழங்கினர்.