பொன்னமராவதி, மே 6 - புதுக்கோட்டை மாவட்டம் பொன்ன மராவதி ஊராட்சி ஒன்றியம் ஆலவயலில் பணி புரியும் 12 மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி இயக்குனர்களுக்கு 38 மாதங்களாக சம்பளம் வழங்காத ஊராட்சி மன்ற தலைவர் எஸ். சந்திரா, பொன்னமராவதி வட்டார வளர்ச்சி அலுவலர்(கி.ஊ) ஆகியோரை கண்டித்தும், சம்பளத்தை உடனடியாக வழங்க வேண்டும் எனக் கோரியும் மே 5 (வியாழக்கிழமை) ஆலவயல் ஊராட்சி மன்ற அலுவலகம் முன்பு புதுக்கோட்டை மாவட்ட உள்ளாட்சி துறை தொழிலாளர் சங்கம் (சிஐடியு) சார்பில் தொழிலாளர்களின் குடும்பத்துடன் கஞ்சி காய்ச்சி, தொடர் காத்திருப்பு போராட்டம் நடைபெற இருந்தது. இந்நிலையில், பொன்னமராவதி வட்டாட் சியரும், வட்ட நிர்வாக நடுவருமான ஜெய பாரதி முன்னிலையில் நடைபெற்ற சமாதான கூட்டத்தில் 12 மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி ஆபரேட்டர்களுக்கு தற்காலிக ஊதியம் ரூ.2,000 வழங்கப்படும். நிதியறிக்கையின் கீழ் 38 மாத நிலுவை தொகை வழங்கப்படும். நீர்த்தேக்கத் தொட்டிகளை சுத்தம் செய்து அதற்கான தொகையை மேற்கண்ட 12 ஆப ரேட்டர்கள் பெற்றுக் கொள்ளலாம் என ஊராட்சி மன்ற தலைவர் எஸ்.சந்திரா உறுதி யளித்ததை தொடர்ந்து நடைபெறவிருந்த போராட்டம் தற்காலிகமாக ஒத்திவைக்கப் பட்டது. மேற்கண்ட சமாதானக் கூட்டத்தில் தொழி லாளர்கள் தரப்பில் சங்கத்தின் மாவட்ட தலை வர் கே.முகமதலி ஜின்னா, மாவட்ட துணைத் தலைவர்கள் யாசிந், முகமது அனிபா, துணைச் செயலாளர் மாரிக்கண்ணு, சிபிஎம் ஒன்றியச் செயலாளர் என்.பகுருதீன், சாலை யோர வியாபாரிகள் சங்க செயலாளர் தீன், வழக்கறிஞர் சுந்தாயி, ஓ.எச்.டி ஆபரேட்டர் கள் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.