புதுக்கோட்டை, டிச.7 - வேங்கைவயல் சம்பவத் தில் யாரையும் காப்பாற்ற வேண்டிய அவசியம் இல்லை என்றார் மாநில சட்டத்துறை அமைச்சர் எஸ்.ரகுபதி.
புதுக்கோட்டையில் சனிக்கிழமை அவர் அளித்த பேட்டியில், “தேர்தல் கணக்குகளில் பிளஸ்கள் மைனஸாகும் என நடிகர் விஜய் கூறியிருக்கிறார். திரைப்படங்களில் எல்லோ ரும் சேர்ந்து உழைத்த படங்களே தோற்றுப் போயி ருக்கின்றன. அரசியலில் பிளஸ்களை யாராலும் மைனஸ் ஆக்க முடியாது.
மன்னராட்சி முறையை ஒழிக்க வேண்டும் என்றும், கருத்தியல் தலைவர்தான் ஆட்சிக்கு வர வேண்டும் என்றும் விடுதலைச் சிறுத் தைகள் கட்சியின் துணைப் பொதுச் செயலர் ஆதவ் அர்ஜூனா பேசியிருக்கிறார். யார் தலைவர் என்பதை எங்கள் கட்சியின் தொண் டர்கள்தான் முடிவு செய் கிறார்கள். மக்கள் வாக்க ளித்து சட்டப்பேரவை உறுப் பினரைத் தேர்வு செய்கி றார்கள். மன்னராட்சி முறை எங்கேயும் இல்லை.
புதுக்கோட்டை வேங்கை வயல் பட்டியலினக் குடி யிருப்பில் மனிதக்கழிவு கலக்கப்பட்ட சம்பவம் தொ டர்பாகவும் விமர்சித்திருக் கிறார்கள். வேங்கைவயலில் யாரையும் காப்பாற்ற வேண்டிய அவசியம் திமுக வுக்கு இல்லை. எந்த சட்டப்பேரவை உறுப்பின ரும், அமைச்சரும் அது போல எதையும் செய்ய வில்லை. நீதிபதி சத்தியநாராய ணன் ஆணைய விசாரணை நடைபெற்று வருகிறது. சிபிசிஐடி போலீசார் டிஎன்ஏ பரிசோதனை வரை நடத்தி வருகிறார்கள்” என்றார்.