அறந்தாங்கி, ஜூன் 20- புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அரசினர் தொழில் நூட்பக் கல்லூரி யில் மாணவர்கள் கல்வி திறனை மேம்படு த்தும் வகையில் மின்னணு மற்றும் தொடர்பியல் துறை மாணவர்களுக்கு திறன் மிகு வகுப்பறை , அறந்தாங்கி சட்ட மன்ற உறுப்பினர் நிதியிலும், தாள்தளக் கூரை 2007 - 2010ம் ஆண்டு கல்லூரியில் பயின்ற முன்னாள் மாணாக்கர்களின் பங்களிப்போடும் அமைக்கப்பட்டது. இவற்றின் திறப்பு விழாவிற்கு கல்லூரி முதல்வர் ச.குமார் தலைமை ஏற்று உரையாற்றினார்.
மின்னணு- தொடர்பியல் துறை தலைவர்பி.ஜெயக் குமார் வரவேற்று பேசினார். திறன் மிகு வகுப்பறையை சட்டமன்ற உறுப்பினர் எஸ்.டி.ராமச்சந்திரன் திறந்து வைத்து, கல்லூரியின் 12 வகுப்பறைக்கு அறை குளிரூட்டி, இன்வெர்ட்டர், அலுமினியக் கதவு, ஜன்னல்கள், தாழ்தள கூரை, ஸ்மார்ட் போர்டு, பேட்டரி ஆகிய நவீனமாக் கப்பட்ட வகுப்பறைகளை உருவாக்கிக் கொடுத்துள்ள கல்லூரி முதல்வரையும் அவருக்கு உறுதுனையாக இருந்த பேராசிரியர்களையும் பாராட்டிப் பேசி னார்.
இதில் பச்சலூர் ஊராட்சி நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் வீ ஜோதிமணி, ஊர்வணி ஊராட்சி மன்ற தலைவர் ஏகாம்பாள் சந்திரமோகன், ஃப்ரன்ஸ் ரோட்டரி சங்க பட்டயத்தலைவர் ரெ.தங்க துரை ஆகியோர் வாழ்த்தி பேசினர். நிகழ்ச்சியில் கல்லூரி அனைத்து துறை தலைவர்கள், உடற்கல்வி இயக்குநர், முதல்வரின் நேர்முக உதவியாளர், அலுவலக பணியாளர்கள் கலந்து கொண்ட னர்.