districts

img

பள்ளிக்கு மின்விசிறிகளை வழங்கிய முன்னாள் மாணவர்கள்

பொன்னமராவதி,ஜூலை 18- புதுக்கோட்டை மாவட்டம், பொன்ன மராவதி அருகே உள்ள ஆலவயல் அரசு மேல்நிலைப் பள்ளியில் கல்வி வளர்ச்சி நாள் மற்றும் காமராஜர் பிறந்த நாள் விழா  நடைபெற்றது. விழாவில் பங்கேற்ற முன்னாள் மாண வர்கள் பள்ளி ஆசிரியர்களின் கோரிக்கை யை ஏற்று 10 மின்விசிறிகளை பள்ளிக்கு வழங்கினர். விழாவில் கண்டியாநத்தம் ஊராட்சி மன்ற தலைவர் செல்வி முரு கேசன் மற்றும் , முன்னாள் மாணவர்கள் பள்ளிக்கு தேவையான மின்விசிறிகளை வழங்கினர்.