districts

img

விவசாயத் தொழிலாளர்களுக்கு தனித்துறை ஒதுக்க வேண்டும் வி.தொ.ச புதுக்கோட்டை மாவட்ட மாநாடு வலியுறுத்தல்

புதுக்கோட்டை, நவ.27 - தமிழக அரசு விவசாயத் தொழிலா ளர்களுக்கு தனித் துறை ஒதுக்கி நலத்திட்டங்களை அமல்படுத்த வேண்டுமென அகில இந்திய விவசாயத் தொழிலாளர் சங்கத்தின் புதுக் கோட்டை மாவட்ட மாநாடு வலி யுறுத்தி உள்ளது. விவசாயத் தொழிலாளர் சங்கத்தின் புதுக்கோட்டை மாவட்ட 9 ஆவது மாநாடு கீரனூரில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. தோழர் பி.மருதப்பா நினைவரங்கில் நடைபெற்ற மாநாட் டுக்கு மாவட்டத் தலைவர் எம்.சண்முகம் தலைமை வகித்தார். வி.மணி வேல் கொடியேற்றினார். எம்.ஜோஷி அஞ்சலி தீர்மானம் வாசித்தார். வர வேற்புக் குழுத் தலைவர் கே.தங்க வேல் வரவேற்றார். மாநாட்டைத் தொடங்கி வைத்து மாநில பொதுச் செயலாளர் வி.அமிர்தலிங்கம் உரை யாற்றினார். மாவட்டச் செயலாளர் எஸ்.சங்கர்,  பொருளாளர் கே.சண்முகம் ஆகியோர்  அறிக்கைகளை முன்வைத்தனர். மாநாட்டை வாழ்த்தி மாநிலச் செயலா ளர் எம்.சின்னதுரை, விவசாயிகள் சங்க மாவட்டச் செயலாளர் ஏ.ராமை யன், சிஐடியு மாவட்டச் செயலாளர் ஏ.ஸ்ரீதர் ஆகியோர் உரையாற்றினர்.  

புதிய நிர்வாகிகளை அறிமுகம் செய்து மாநிலச் செயலாளர் ஏ.பழநி சாமி நிறைவுரையாற்றினார்.  மாவட்டத் தலைவராக எஸ்.சங்கர்,  செயலாளராக டி.சலோமி, பொருளாள ராக கே.சண்முகம், துணைத் தலை வர்களாக எம்.சண்முகம், வி.மணி வேல், சி.ராசு, சுபி, பி.ராமசாமி, துணைச்  செயலாளர்களாக கே.சித்திரைவேல், எஸ்.பொருமாள், ஆர்.சக்திவேல், ஏ.செந்தமிழ்ச்செல்வன், எம்.இளவரசு உள்ளிட்ட 25 பேர் கொண்ட புதிய மாவட்டக் குழு தேர்வு செய்யப்பட்டது. தமிழக அரசு வீடு இல்லாத அனை வருக்கும் இலவச வீடும், மனைப்பட்டா  இல்லாதவர்களுக்கு இலவச வீட்டு மனைப் பட்டாவும் வழங்க வேண்டும்.  காவிரி, வைகை, குண்டாறு திட்டத்தை விரைந்து செயல்படுத்துவதோடு புதுக்கோட்டை மாவட்டத்தின் அனைத் துப் பகுதிகளுக்கும் விரிவுபடுத்த வேண்டும். ஏழை மக்களுக்கான சமூக நலத்திட்டங்களை தொடர்ந்து அமல் படுத்த வேண்டும். தமிழக அரசு விவசாயத் தொழிலா ளர்களுக்கு தனித் துறை ஒதுக்கி நலத்திட்டங்களை அமல்படுத்த வேண்டும். மகாத்மா காந்தி தேசிய  வேலை உறுதி திட்டத்தில் உள்ள குறை பாடுகளைக் களைய வேண்டும். நூறு நாள் வேலையும், நிர்ணயிக்கப்பட்ட கூலியையும் குறைக்காமல் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மா னங்கள் நிறைவேற்றப்பட்டன.