புதுக்கோட்டை, ஜூலை 11- புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள ஜெகதாப்பட்டினம் மற்றும் கோட்டைப்பட்டினம் கடற்கரைக் கிராமங்களில் இருந்து 13 மீனவர் கள் மூன்று இயந்திரப் படகுகளில் புதன்கிழமை காலை கடலுக்குப் புறப்பட்டனர்.
இவர்கள் 13 பேரும் வியாழக் கிழமை அதிகாலை ஒரு மணியள வில் நெடுந்தீவு அருகே மீன்பிடித் துக் கொண்டிருந்தபோது, அங்கு வந்த இலங்கை கடற்படை, தமி ழக மீனவர்கள் 13 பேரும் எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி கைது செய்துள்ளது. இதனை கடலோர பாதுகாப்புக் குழு வட்டாரங்கள் உறுதி செய்துள்ளன.
கைது செய்யப்பட்ட மீன வர்களின் பெயர்கள்: ஆர். செல்வ குமார் (41), எஸ். விஜயபிரியன் (21), எஸ். விஜயபிரகாஷ் (16), பி. காசிராஜா (68), வி. சேகர் (60), ஐ. மணிகண்டன் (37), வி. சுபாஷ், ஆர். ரஹ்மதுல்லா (38), எம். திருமுரு கன் (27), கே. சந்திரசேகர் (42), எம். மணிகண்டன் (25), பி. கார்த்திக் (23), எம். ஜெயக்குமார் (53) என்பது தெரியவந்துள்ளது.ஏற்கெனவே ஜூலை 1-ஆம் தேதி இராமநாதபுரம் மாவட்டம் தங்கச்சிமடம், பாம்பன் பகுதி யைச் சேர்ந்த மீனவர்கள் 25 பேரை எல்லை தாண்டி மீன்பிடித்ததாகக் கூறி இலங்கைக் கடற்படை கைது செய்தது. இதற்கு எதிராக நடை பெற்ற போராட்டங்களுக்குப் பிறகு, முதலில் 22 மீனவர்கள், பின் னர் புதன்கிழமையன்று 3 மீன வர்கள் என விடுவிக்கப்பட்டனர். இந்நிலையில் மறுநாளே புதிதாக 13 மீனவர்களை இலங்கை கடற் படை கைது செய்துள்ளது.