புதுக்கோட்டை, ஆக.12 - புதுக்கோட்டை மாவட்டத்தில் முதல் கட்டமாக 103 தீக்கதிர் சந்தாக்களுக் கான தொகை ரூ.1,82,450 ஒப்படைக் கப்பட்டது.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் கட்சியின் மத்தியக் குழு, மாநி லக்குழு முடிவுகள் விளக்கம் மற்றும் தீக்கதிர் சந்தாக்கள் ஒப்படைப்பு பேரவை புதுக்கோட்டை கட்சி அலுவல கத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
பேரவைக்கு கட்சியின் மாவட்டக் குழு உறுப்பினர் கி.ஜெயபாலன் தலைமை வகித்தார். பேரவையில் கலந்துகொண்டு மாநிலக்குழு உறுப்பி னர் ஐ.வி.நாகராஜன் விளக்கவுரை யாற்றினார். அவரிடம் 76 ஆண்டு, 19 அரையாண்டு, 8 தினசரி என 103 புதிய சந்தாக்களுக்கான தொகை ரூ.1,82,450 வழங்கப்பட்டது. மாநிலக் குழு உறுப்பி னரும், கந்தர்வகோட்டை தொகுதி சட்டப் பேரவை உறுப்பினருமான எம்.சின்னதுரை வாழ்த்திப் பேசினார்.
மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் எஸ்.சங்கர், ஏ.ஸ்ரீதர், கே.சண்முகம், சி.அன்புமணவாளன், சு.மதியழகன், துரை.நாராயணன், ஒன்றியச் செயலா ளர்கள், மாவட்டக் குழு உறுப்பினர்கள் பங்கேற்றனர். நகரச் செயலாளர் இரா.சோலையப்பன் நன்றி கூறினார்.