நாமக்கல், ஜூலை 19- நகராட்சி கழிப்பிடத்தை முன்னறி விப்பின்றி ஒப்பந்ததாரர்கள் பூட்டிச் சென்றதால் ஆவேசம் அடைந்த பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்ட னர்.
நாமக்கல் மாவட்டம், பள்ளிபாளை யம் நகராட்சிக்கு உட்பட்ட ஆவரங்காடு பகுதியில் நகராட்சி பொதுக் கழிப்பி டம் செயல்பட்டு வருகிறது. அப்பகு தியைச் சுற்றிலும் 400க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் இந்த பொதுக் கழிப் பிடத்தை பயன்படுத்தி வருகின்றனர். கடந்த பல ஆண்டுகளாகவே ஆண்க ளுக்கு இரண்டு ரூபாயும், பெண்க ளுக்கு ஒரு ரூபாயும் கழிப்பிடம் பயன் படுத்துவதற்காக கட்டணம் வசூலிக் கப்பட்டு வந்தது.
இந்நிலையில் பொதுக்கழிப்பி டத்தை பயன்படுத்தும் பெண்களும் இனி இரண்டு ரூபாய் தர வேண்டுமென நகராட்சி பொதுக் கழிப்பிடத்தை ஏலம் எடுத்த புதிய ஒப்பந்ததாரர்கள் கூறிய தாக தெரிகிறது. ஆனால் அங்குள்ள பெண்களோ கூலி தொழிலாளர்களாக இருக்கும் நாங்கள் காலங்காலமாக ஒரு ரூபாய் மட்டுமே கொடுத்து கழிப் பிட கட்டிடத்தை பயன்படுத்தி வருகி றோம். எனவே கூடுதல் கட்டணம் தர முடி யாது என அவரிடம் கூறியுள்ளனர்.
கடந்த ஒரு வார காலமாகவே பிரச் சனை இருந்து வந்த நிலையில், வியா ழனன்று இரவோடு இரவாக திடீரென ஒப்பந்ததாரர்கள் ஆண்கள் பயன்படுத் தும் 30 கழிப்பறைகள் மற்றும் பெண்கள் பயன்படுத்தும் 25 கழிப்பறைகள் என அனைத்தையும் பூட்டிவிட்டு சென்றனர். மேலும், கழிவறை உள்ளே இருந்த குடி நீர் குழாய் நீர் வெளியேறும் வகையில் திறந்து விட்டு சென்று விட்டனர். இதனை அறிந்த அப்பகுதியை சேர்ந்த பொது மக்கள் கோபமடைந்து, நகராட்சி பொது கழிப்பிடம் அருகே திடீர் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனை அடுத்து அங்கு விரைந்த பள்ளிப்பாளையம் நகராட்சி சுகாதார ஆய்வாளர் உள்ளிட்ட அதிகாரிகள் பொது மக்களை சமரசம் செய்து, இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனக் கூறி, ஒப்பந்ததாரர்களை வரவழைத்து, பொதுக் கழிப்பிடத்தை திறக்க செய்த னர். இதனை அடுத்து கழிப்பிட கட்டடம் பொதுமக்கள் பயன்பாட்டிற்காக திறந்து விடப்பட்டது.