நாமக்கல், ஜூலை 17- சாய ஆலைக்கு மின் இணைப்பு வழங்குவதை கண்டித்து பொதுமக்கள் புதனன்று போராட்டத்தில் இறங்கி யதால் பரபரப்பு ஏற்பட்டது
நாமக்கல் மாவட்டம் பள்ளிபா ளையம் அடுத்துள்ள ஆவத்திப்பாளை யம் பகுதியில் ராமகிருஷ்ணா நகர் அமைந்துள்ளது. இங்கு 300-க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளது. இங் குள்ள 34 குடும்பங்களுக்கு கடந்த மூன்று ஆண்டுகளுக்கு மேலாக மின் இணைப்பு வழங்கப்பட வில்லை. இத னால் புதிய மின் இணைப்பு வழங்க வேண்டும் என கடந்த மூன்று மாதங்க ளுக்கு முன்பு பள்ளிபாளையம் மின்வா ரிய அலுவலகத்தில் 34 குடும்பங்களை சேர்ந்தவர்களும் விண்ணப்பித்துள்ள னர்.
இந்நிலையில் கடந்த செவ்வா யன்று புறம்போக்கு நிலத்தின் அருகே தனியாருக்கு சொந்தமான பட்டா இடத்தில் உள்ள சாய ஆலைக்கு மின் இணைப்பு வழங்கும் பணிகள் நடைபெறுவதாக தகவல் பரவியது. அதே நேரத்தில் புதிய மின் இணைப்பு வழங்க வேண்டும் என விண்ணப்பித்த 34 குடும்பங்களுக்கும் மின் இணைப்பு வழங்கப்பட மாட்டாது என விண் ணப்பம் ரத்து செய்யபட்டதாக செல்போ னில் குறுந்தகவல்கள் வந்துள்ளது.
இதனால் ஆவேசமடைந்த அப்ப குதி மக்கள், மின் கம்பம் அமைக்கும் இடத்தில் ஒன்று கூடி போராட்டத்தில் ஈடுபட்டனர். 34 குடும்பங்கள் வாழும் பகுதியில் மின் இணைப்பு வழங்க மறுக்கும் அதிகாரிகள், புறம்போக்கு வழியாக ஊருக்குள் செல்லும் சாலையை பயன்படுத்தி தனியார் சாய ஆலைக்கு மட்டும் மின்சாரம் வழங்கு வது எப்படி என கேள்வி எழுப்பினர்.
இதனையடுத்து, அங்கு வந்த ஊராட்சித் தலைவர் மற்றும் துணைத் தலைவர் ஆகியோர் ஊர் பொதுமக்க ளிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். மின்சார இணைப்பு வழங்கப்படாத 34 குடும்பங்கள் குடியிருக்கும் நிலம் நீதிமன்ற வழக்கில் இருப்பதால் மின் இணைப்பு பெறுவது போன்ற பணிகள் மேற்கொள்வதில் சிரமங்கள் உள்ளது. இருந்த போதிலும் இவ்வழியே புதிய மின் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது போல நீங்கள் குடியிருக்கும் பகுதிக் கும் மின் இணைப்பு கேட்டு மின்வா ரிய அதிகாரிகளை நேரில் சந்தித்து முறையிடலாம். அதுவரை பொதுமக் கள் அமைதியாக இருங்கள் என பொது மக்களை சமரசம் செய்தார். இதனை யடுத்து அனைவரும் கலைந்து சென்ற னர்.