districts

img

பாக்கு மட்டை தட்டு தயாரிப்பு மந்தம்: உற்பத்தியாளர்கள் கவலை

நாமக்கல், ஜூலை 19- நாமக்கல் மாவட்டத்தில் காலநிலை மாறு பாட்டால் பாக்கு மட்டை தட்டு தயாரிப்பு குறைந் துள்ளதாக, உற்பத்தியாளர்கள் வேதனையு டன் தெரிவித்துள்ளனர்.

நாமக்கல் மாவட்டத்தின் பல்வேறு இடங் களில் பாக்கு மட்டை தட்டு தயாரிப்பு தொழிற் கூடங்கள் இயங்கி வருகிறது. திருமண விசே ஷங்கள், கோவில் திருவிழாக்கள், பொது நிகழ்வுகள் என பல்வேறு நிகழ்வுகளுக்கும் எளிதில் மக்கிப் போகும் இயற்கையான முறையில் இருக்கும் பாக்கு மட்டை தட்டு கள் தேவை தற்போது அதிகரித்து வருகி றது.

அதே நேரத்தில் வாழை இலையின் உற் பத்தி குறைவு மற்றும் ஒரு இலை சராசரியாக நான்கு முதல் 12 ரூபாய் வரை வருவதா லும், தொலைதூரங்களில் இருந்து வாழை  இலை கட்டுகள் வரும் பொழுது சேதாரம் உள்ளிட்டவை ஏற்படுவதாலும், அதைக் காட் டிலும் பாக்குமட்டை தட்டுகள் பயன்படுத்து வது எளிது என்பதாலும், தொடர்ந்து பல்வேறு தரப்பினர் பாக்கு மட்டை தட்டுகளை விரும்பி வாங்கி வருகின்றனர். குறிப்பாக ஆயிரக் கணக்கான மக்கள் கூடும் கோவில் திரு விழாக்கள், கும்பாபிஷேக விழாக்கள், அரசி யல் கட்சி பொதுக் கூட்டங்கள், பொது நிகழ்வு கள் என பல்வேறு தளங்களில் தற்போது பாக்குமட்டை தட்டுகள் அதிகளவு பயன்ப டுத்தப்பட்டு வருகிறது. 

இந்நிலையில் நாமக்கல் மாவட்டம், பள் ளிபாளையம் உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதி களில் ஆடி மாத உள்ளூர் கோவில் திருவிழாக் கள் துவங்கியுள்ள நிலையில், கடந்த ஒரு வார காலமாக நாமக்கல் மாவட்டத்தின் பல்வேறு  பகுதிகளில் வானம் மேகமூட்டத்துடன் காணப் படுவதோடு இல்லாமல், தொடர்ந்து காலை  தொடங்கி இரவு வரை சாரல் மழை பெய்து  வருவதால், பொதுமக்கள் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது. மேலும் பாக்கு மட்டை தட்டுகள் உற்பத்திக்கு முன் பாக பாக்கு மட்டைகளை நன்றாக வெயிலில் காயவைத்து, அதன் பிறகே அதை தட்டுக ளாக உற்பத்தி செய்ய முடியும். தற்போது சீதோசநிலை மாறுபாடு ஏற்பட்டு நிலம் எப் போதும் ஈரப்பதத்துடன் இருப்பதால், பாக்கு மட்டைகளை காய வைக்க முடியாத நிலை  ஏற்படுகிறது. இதனால் உற்பத்தி பாதிப்பு ஏற்ப டுவதாகவும், தற்போது சீசன் துவங்கி உள்ள  நிலையில், வாடிக்கையாளர்கள் கேட்கும்  அளவிற்கு தட்டுகளை தயார் செய்ய முடியாத நிலை உண்டாகி உள்ளதாக உற்பத்தியா ளர்கள் கவலை தெரிவிக்கின்றனர். அடுத்த வாரத்தில் நிலைமை சீராகும் என எதிர்பார்ப்ப தாக உற்பத்தியாளர்கள் நம்பிக்கை தெரிவிக் கின்றனர்.