districts

img

எந்த அஸ்தியில் இருந்து இந்தியா எழப்போகிறது? மதுக்கூர் ராமலிங்கம் கேள்வி

நாமக்கல், ஜூலை 25- நமது நாட்டில், மகாத்மா காந்தியின் அஸ்தியை பாதுகாக்கிறார்கள். கோட் சேவின் அஸ்தியை அவர்கள் பாது காத்து வருகிறார்கள். எந்த அஸ்தியில் இருந்து இந்தியா எழப்போகிறது என் பதே இன்று நம் முன்பு உள்ள கேள்வி, என வி.ராமசாமி நூற்றாண்டு விழா நிகழ்வில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட் சியின் மாநில செயற்குழு உறுப்பினர் கேள்வி எழுப்பினார்.

சுதந்திரப் போராட்ட வீரரும், மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முதுபெ ரும் தலைவரும், திருச்செங்கோடு சட்ட மன்ற முன்னாள் உறுப்பினருமான மோளிப்பள்ளி வி.ராமசாமி அவர்களின் நூற்றாண்டு துவக்க விழா திருச்செங் கோடு கொங்கு திருமண மண்டபத்தில் செவ்வாயன்று நடைபெற்றது. இந்நிகழ் விற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் மாவட்டச் செயலாளர் எஸ்.கந்த சாமி தலைமை வகித்தார். ஆண்டிபா ளையம் ஊராட்சி மன்றத் தலைவரும், வரவேற்புக் குழு தலைவருமான ஏ.ஆதி நாராயணன் வரவேற்றார். இந்நிகழ் வில் தோழர் வி.ஆர் அவர்களின் குடும்ப  உறுப்பினர்கள் கௌரவிக்கப்பட்டனர். தொடர்ந்து மாவட்டத்தின் பல்வேறு பகு தியிலிருந்து வந்திருந்த மார்க்சிஸ்ட் கட்சியினர், விழா நிகழ்வின் ஒரு பகுதி யாக தீக்கதிர் நாளிதழ் சந்தா மற்றும் மார்க்சிஸ்ட் மாத இதழுக்கான சந் தாவை தீக்கதிர் நாளிதழ் முதன்மை பொது மேலாளர் என்.பாண்டியிடம்  ஒப் படைத்தனர். 

இந்நிகழ்வில், மாநில செயற்குழு உறுப்பினர் மதுக்கூர் ராமலிங்கம் பேசு கையில், விஆர் என மக்களால் அன் போடு அழைக்கப்படும் தோழர் வி.ராம சாமி அவர்களுடைய நூற்றாண்டு விழா  என்பது சாதாரண நிகழ்வு கிடையாது. ஒரு மனிதன் சாதாரணமாக இறந்து போனால், ஆங்காங்கே போஸ்டர் ஒட் டப்படும். அதற்குப் பிறகு அதைப் பற் றிய ஒரு பேச்சே இருக்காது. ஆனால் வி. ராமசாமி அவர்கள் இறந்து 25 ஆண்டுக ளுக்குப் பிறகும், அந்தப் பெயர் இன்ன மும் ஓர் அதிர்வை ஏற்படுத்துகிறது என்றால் அதுதான் அவர் வாழ்ந்த வாழ்க் கையினுடைய பெரும் பயனாக இருக்கி றது. ஈரோடு என்றாலே, அந்த ராமசாமி நினைவுக்கு வருவார், அதேபோல திருச் செங்கோடு என்றாலே இனி எனக்கு வி.ராமசாமி தான் என்னோட நினைவுக்கு வருவார். நம்முடைய மகத்தான தலை வர்கள் பலருக்கும் நாம் நூற்றாண்டை  கண்டிருக்கிறோம். அந்த வழியிலே நம் முடைய அன்புத் தலைவர் நெஞ்சமெல் லாம் நிறைந்திருக்கின்ற தோழர் வி.ஆர் அவர்களை இந்நாளில் நாம் நினைவு கூறுகிறோம். 

இன்றைக்கு தேசத்தின் முன்னால் இருக்கிற கேள்வி இரண்டு தான். ஒரு  பக்கம் அவர்கள் கோட்சேவின் அஸ் தியை பாதுகாத்து வைத்திருக்கிறார் கள். மறுபுறத்தில் மத நல்லிணக்கத்தின் அடையாளமாக மகாத்மா காந்தியின் அஸ்தியையும் பாதுகாத்து இருக்கிறார் கள். எந்த அஸ்தியில் இருந்து இந்தியா எழப்போகிறது என்பதுதான் இன்றைய  இந்தியாவின் முன்னாள் இருக்கிற மிகப் பெரிய கேள்வியாக உள்ளது. நாம்  காந்தியின் இந்தியாவை உருவாக்கு வோம், மத நல்லிணக்கத்தை, மதச்சார் பின்மையை போற்றிய அந்த காந்தி அஸ்தி என்பது புனிதமானது. இந்த மண் ணுக்காக உயிர் நீத்த மகானை என்றென் றும் போற்றுவோம். காந்தியத்தில் விழுந்து கம்யூனிஸ்ட் ஆக எழுந்த  தோழர் விஆர் புகழ் என்றென்றும் நிலைக் கும், என்றார். 

மாநில செயற்குழு உறுப்பினர் என். பாண்டி பேசுகையில், இன்றைய சூழ லில் கம்யூனிஸ்ட்டாக சேர்வது பெரி தல்ல, சாகும்போதும் அவர் கம்யூனிஸ்ட் டாக சாவது என்பது தான் பெரிய விஷ யம். இன்றைக்கு இருக்கிற நிலையில் ஒரு சிறந்த கம்யூனிஸ்டாக வி.ஆர், போராளியாக வாழ்ந்து மறைந் திருக்கிறார்  எனும்போது, அது மிகவும் பெருமைக்குரிய விஷயமாக கருதுகி றோம். இன்றைக்கு இருக்கக்கூடிய இந் திய அரசியல் சூழலில், கம்யூனிஸ்ட்கள் தங்களுடைய பணியை இன்னும் கூர் மைப்படுத்த வேண்டிய தேவை உள் ளது. ஒரு நெருக்கடியான காலத்தில் இன்றைக்கு இந்தியா இருந்து கொண்டி ருக்கிறது. வெறுப்பு அரசியலுக்கு எதி ராக நாம் விரைந்து செயல்பட வேண்டிய தேவை இருக்கிறது. அதற்கு கடந்த காலத்தில் வாழ்ந்து மறைந்த தலை வர்கள் சந்தித்த பல்வேறு இயக்கங்கள் போராட்டங்கள் அதனுடைய அனுப வங்களை நாம் உள்வாங்கிக் கொண்டு முன்னேறுவோம், என்றார்.

மாநில செயற்குழு உறுப்பினர் செ. முத்துக்கண்ணன் பேசுகையில்,   குடி  போதைக்கு எதிரான போராட்டம் மேற் கொண்டதால் வி.ஆர். தாக்குதலுக்கு  உள்ளானார். இருந்த போதும் விடாப்பிடி யாக தனது போராட்டத்தை மேற் கொண்டு வந்தவர் வி.ஆர்.  சுதந்திரப் போராட்டத்தில் பங்கெடுத்து கைது செய் யப்பட்டு சிறையிலே இருந்தவர்களில் அந்தமான் சிறையில் மட்டும் கைது செய் யப்பட்டவர்கள் பத்தாயிரம் பேரில் 8000 பேர் கம்யூனிஸ்டுகள் என்பது வரலாறு. அப்படிப்பட்ட வரலாற்றை உடைய ஒரு புள்ளிதான் தோழர் வி.ராமசாமி. எதிர் வரும் நாட்களில் இந்தியா எதிர்கொண்டு இருக்கக்கூடிய வகுப்புவாதம் என்கிற இந்துத்துவ அடையாளத்தை மதவாத நடவடிக்கைகளுக்கு எதிராக நடக்கும்  போராட்டத்தை முன் வரிசையில் நின்று  மக்களுக்கான போராட்டங்களை மேற் கொள்வோம், என்றார். 

இந்நிகழ்வில், கட்சியின் நாமக்கல் மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் ஏ. ரங்கசாமி, பி.பெருமாள், எம்.அசோ கன், என்.வேலுச்சாமி கி.தங்கமணி, எஸ்.தமிழ்மணி, பி.ஜெயமணி, சு. சுரேஷ், ஏ.டி.கண்ணன் மற்றும் கட்சியின் மூத்த தலைவர்கள் ஆர்.சிங்காரவேலு, பி.செங்கோடன், ஆர்.வெங்கடபதி மற் றும் ஈஸ்வரன் எம்எல்ஏ, திருச்செங் கோடு நகர்மன்றத் தலைவர் நளினி சுரேஷ் பாபு, வரவேற்புக்குழு பொருளா ளர் மனோகரன், ஐ.ராயப்பன் உட்பட வர்க்க வெகுஜன அமைப்புகளை சேர்ந் தவர்கள் மற்றும் ‘இந்தியா’ கூட்டணி  கட்சிகளைச் சேர்ந்தவர்கள் பங்கேற்ற னர். முடிவில், வரவேற்புக்குழு செயலா ளர் கணேச பாண்டியன் நன்றி கூறி னார்.