நாமக்கல், ஜூன் 10- கால்நடை மருத்துவர் இளநிலை பட் டப்படிப்புகளுக்கான கலந்தாய்வு ஜூலை மாதம் 2 ஆவது வாரம் துவங்குகி றது என, தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழக துணை வேந்தர் சிவக்குமார் கூறியுள்ளார். நாமக்கல் கால்நடை மருத்துவக்கல் லுாரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்திற்கு, முன்னாள் மாணவர்கள் ரூ.5 கோடி மதிப் பீட்டில் புதிய கலையரங்கம் கட்டியுள்ள னர். அதன் திறப்பு விழா ஞாயிறன்று நடைபெற்றது.
இவ்விழாவில், தமிழ் நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல் கலைக்கழக துணைவேந்தர் சிவக்கு மார் கலந்து கொண்டு, புதிய கலையரங் கத்தை திறந்து வைத்து, விழா மலரை வெளியிட்டார். இதைத்தொடர்ந்து அவர் செய்தியாளர்களிடம் பேசுகை யில், கால்நடை மருத்துவ அறிவியல் பாடத்திற்கு தொடர்ந்து மாணவர்களி டையே அதிக வரவேற்பு கிடைத்து வரு கிறது. இந்தாண்டு தேனி, உடுமலைப் பேட்டை உள்ளிட்ட 3 கால்நடை மருத்து வக்கல்லூரிகளில், தலா 20 இடங்கள் வீதம், 60 இடங்கள் கூடுதலாக ஏற்படுத் தப்பட்டு சேர்க்கை நடைபெற உள்ளது.
இளநிலை கால்நடை மருத்துவப்ப டிப்புக்கு 660 சேர்க்கை இடங்களும், உணவு 40, கோழியினம் 40, பால்வளம் 20, ஆகிய தொழில் நுட்ப பட்டப்படிப்புக ளுக்கு மொத்தம் 100 இடங்களும், மாண வர்கள் சேர்க்கைக்காக ஒதுக்கீடு செய் யப்பட்டுள்ளன. இளநிலை கால்நடை மருத்துவப் படிப்புக்கு, தமிழக மாணவர்களுக்கு 600 இடங்களும், அகில இந்திய மாண வர்களுக்கு 60 இடங்களும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.
அகில இந்திய அளவில் உள்ள 15 கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகங்களில், தமிழகத்தில் உள்ள தமிழ்நாடு கால் நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்க ழகம் தொடர்ந்து, இரண்டு ஆண்டுக ளாக முதன்மையானதாக திகழ்ந்து வரு கிறது. இந்நிலையில், வரும் ஜூலை மாதத்தின் 2 ஆவது வாரம் கால்நடை மருத்துவர் இளநிலை பட்டப்படிப்புக ளுக்கு கலந்தாய்வு துவங்குகிறது. 12 ஆம் வகுப்பில் உயிரியல், இயற்பியல், வேதி யியல் ஆகிய பாடங்களில் மாணவர்கள் பெற்றுள்ள மதிப்பெண்கள் அடிப்படை யில் சேர்க்கை நடைபெறும், என்றார்.