districts

தவறான சிகிச்சையளித்த மருத்துவர்: ரூ.12 லட்சம் வழங்க உத்தரவு

நாமக்கல், ஜூலை 15- வயிற்று வலியில் வந்த நோயாளிக்கு தவ றான அறுவை சிகிச்சை செய்த மருத்துவர் ரூ.12 லட்சம் வழங்க நாமக்கல் மாவட்ட நுகர்வோர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

நாமக்கல் மாவட்டம், ராசிபுரத்தில் மின் சார வாரிய அலுவலகம் அருகில் வசித்து வரு பவர் ராஜா (52). கடந்த 2022 ஆம் ஆண்டு,  செப்டம்பர் மாதம் நாமக்கல் நுகர்வோர் நீதி மன்றத்தில் ராஜா தாக்கல் செய்த வழக்கில் கூறியதாவது, 2021 ஆம் ஆண்டு, ஆகஸ்ட் மாதம் அடிக்கடி வயிறு வலி ஏற்பட்டதால், ராசிபுரத்தில் உள்ள பிரபலமான தனியார் மருத்துவமனையில் மருத்துவர் ரமேஷை சந்தித்தேன். அவர் சோதனை செய்து பார்த் துவிட்டு குடலிறக்கம் பிரச்சனை இருப்பதாக வும், உடனடியாக ஹெர்னியா ஆபரேஷன் செய்யாவிட்டால் உயிருக்கே ஆபத்து ஏற் படும் என்றும் தெரிவித்தார்.

அறுவை சிகிச்சைக்காக ரூ.60 ஆயி ரத்தை பெற்றுக் கொண்டு, வேறு ஒரு மருத்து வமனையில் உள்ள அறுவை சிகிச்சை அரங் கத்தில், மருத்துவர் தமக்கு அறுவை சிகிச் சையை தொடங்கினார். மயக்க மருந்து கொடுக்கப்பட்டு இருந்ததால், அறுவை சிகிச்சை செய்த போது தமக்கு அரை மயக்க நிலை இருந்தது. திடீரென அறுவை சிகிச்சை செய்வது பாதியில் நிறுத்தப்பட்டது. அப் போது அறுவை சிகிச்சைக்கு தேவையான கார்பன் டை ஆக்சைடு கேஸ் தீர்ந்து விட்ட தாக அங்கிருந்த நர்சுகள் பேசிக் கொண்ட னர். தமக்கு வழங்கப்பட்டிருந்த மயக்க மருந்து வலுவிழந்து தமக்கு மயக்கம் தெளிந்துவிட் டது. இதனால் அறுவை சிகிச்சை செய்யும் போது மிகுந்த வலியால் துடித்து அறுவை சிகிச்சை செய்வதை நிறுத்துமாறு கேட்டுக் கொண்ட போது நர்சுகள் தம்மை அழுத்தி பிடித்துக் கொண்டு அறுவை சிகிச்சை செய்து முடித்தனர். 

அறுவை சிகிச்சை செய்த பின்னர் தலையை நிமிர்த்த முடியவில்லை. நிமிர்த்தி னால் வயிற்றில் கடுமையான வலி ஏற்பட்டது. இதன் பிறகு நான்கு முறை மருத்துவரை சந் தித்தும் சரியான சிகிச்சையை தமக்கு வழங்க வில்லை. தலையை நிமிர்த்த முடியாமல் சாப்பிட முடியாமல் ஏழு கிலோ எடை தமக்கு  குறைந்துவிட்டது. உடல்நிலை மோசமான தால், கோவையில் உள்ள தனியார் மருத்துவ மனையில் உள்நோயாளியாக சிகிச்சைக்கு சேர்ந்தேன். அங்கு அறுவை சிகிச்சை செய்த போது பொருத்தப்பட்ட வலையில் தொற்று ஏற்பட்டு உள்ளதாக தெரிவித்தனர். அறுவை சிகிச்சையின் போது கால தாமதம் செய்ததா லும், தரமான வலையை பொருத்தாததாலும், தரமற்ற வாயுவை அறுவைச் சிகிச்சையின் போது பயன்படுத்தியதாலும் உடலில் தொற்று ஏற்பட்டு இருதயம் வரை பாதிப்பு ஏற்பட்டு விட்டது என்பது தெரியவந்து என புகாரில் தெரிவித்திருந்தார். 

மருத்துவமனை தரப்பில் வழக்கு தாக் கல் செய்தவருக்கு நல்ல முறையில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. அறுவை சிகிச் சைக்குப் பின்னர் அவருக்கு தொற்று ஏற்பட வில்லை. தங்களது தரப்பில் சேவை குறை பாடு எதுவும் ஏற்படவில்லை. தீய நோக்கத் துக்காக தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கை தள்ளுபடி செய்ய வேண்டும் என்று மருத்துவ மனை தரப்பில் நீதிமன்றத்தில் வாதிடப்பட் டது.

இந்த வழக்கை விசாரித்த நாமக்கல் மாவட்ட நுகர்வோர் நீதிமன்ற நீதிபதி வீ.ராம ராஜ், உறுப்பினர் ஆர். ரமோலா ஆகியோர் வழங்கிய தீர்ப்பில், வழக்கு தாக்கல் செய்தவ ருக்கு இரண்டாவது முறை அறுவை சிகிச்சை செய்து மேல் சிகிச்சை வழங்கிய மருத்துவ மனை ஆவணங்களின்படி முதலாவது அறுவை சிகிச்சை செய்த மருத்துவர் அலட்சியமான மருத்துவ சிகிச்சை மேற்கொண்டு சேவை  குறைபாடு புரிந்துள்ளதாக நிரூபிக்கப்பட் டுள்ளது.

மேலும், முதலாவது அறுவை சிகிச் சைக்கு செலுத்திய ரூ.60 ஆயிரம் முதலாவ தாக அறுவை சிகிச்சையின் காரணமாக ஏற் பட்ட பிரச்சனைகளை சரி செய்ய செலவு  செய்த தொகை ரூ.8,74,825, தவறான அறுவை சிகிச்சையின் காரணமாக வழக்கு தாக்கல்   செய்தவருக்கு ஏற்பட்ட சிரமங்கள் மற்றும் மன உளைச்சலுக்கு இழப்பீடு ரூ.2 லட்சம்  மற்றும் வழக்கின் செலவு தொகை  ரூ.15  ஆக மொத்தம் ரூ.11,99,825யை நான்கு வாரத் திற்குள் வழக்கு தாக்கல் செய்தவருக்கு முத லாவது அறுவை சிகிச்சை செய்த மருத்துவர் வழங்க வேண்டும் என்று நாமக்கல் மாவட்ட நுகர்வோர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.