districts

img

ஆற்றில் இறங்கி சிபிஎம்

நாமக்கல், ஜூன் 8- குடிநீர் விநியோகத்தில் அலட்சியம் காட்டும் குடிநீர் வடி கால் வாரியத்தை கண்டித்து மார்க்சிஸ்ட் கட்சியினர் திரு மணிமுத்தாற்றில் இறங்கி போராட்டத்தில் ஈடுபட்டனர். 

நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு அடுத்துள்ள அக ரம் கிராமம், கொத்தம்பாளையம், சீத்தக்காடு பகுதியில் நூறு குடும்பங்களுக்கு காவிரி குடிநீர் சென்று கொண்டுள்ளது. இங்கு கடந்த சில வருடங்களுக்கு முன்பு கொத்தம்பாளை யத்தில் இருந்த தரைப்பாலமானது, மேம்பாலமாக கட் டப்பட்டது. இந்நிலையில், பாலத்திற்கு கீழ்புறமாக திருமணி முத்தாறு வாய்க்கால் பாதையில் சுமார் 500 மீட்டர் அள விற்கு பைப் லைன் எடுத்து அப்பகுதிக்கு காவிரி குடிநீர் விநி யோகம் செய்து வந்தனர். இங்கு வெள்ளப்பெருக்கு ஏற்படும் போது இரும்பு பைப்புகள் அனைத்தும் துருப்பிடித்து அடிக்கடி உடைந்து விடுகிறது.

 இதனால் அப்பகுதி மக்கள் உரிய குடிநீர் கிடைக்காமல் பெரும் சிரமத்தை சந்தித்து வந்தனர். இது குறித்து மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சம்பந்தப்பட்ட துறை அதிகாரிக ளுக்கு கோரிக்கை மனு அளித்தது. ஆனால், 15 மாதங்களாக நடவடிக்கை எடுக்காமல் இருந்தது. இந்நிலையில் வெள்ளி யன்று வழக்கம்போல் இரும்பு குடிநீர் குழாய் இணைப்புகள் உடைந்தன. இதனை சரி செய்யாத அதிகாரிகளை கண்டித்து திருமணிமுத்தாறு காவிரி ஆற்றில் இறங்கி மார்க்சிஸ்ட்  கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினரும், ஒன்றியக் கவுன்சிலருமான சுரேஷ் தலைமையில் பொதுமக் கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். 

இதனையடுத்து, சம்பவ இடத்திற்கு தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் போராட்டக்காரர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினர். அப்போது ஓரிரு நாட்களில் அனைத்து  குழாய் இணைப்புகளும் சரி செய்து, பொதுமக்களுக்கு குடிநீர்  விநியோகம் செய்வதாக உறுதியளித்தனர். இதனையேற்று அனைவரும் கலைந்து சென்றனர். இப்போராட்டத்தில், சிபிஎம் ஒன்றியக்குழு உறுப்பினர்கள் மாரிமுத்து, ரமேஷ், ஈஸ்வரன், ராஜி, பாலகிருஷ்ணன் மற்றும் மோட்டார் சங்க  மாவட்டப் பொருளாளர் சத்திவேல் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.