நாமக்கல், செப். 26- தென்னை விவசாயிகளின் கோரிக்கைகளை முன்னிறுத்தி அக்டோ பர் 20 ஆம்தேதி தமிழகத்தின் ஐந்து நகரங்களில் ஆர்ப்பாட்டம் நடத்துவது என்று தென்னை விவசாயிகள் சங்கத்தின் மாநிலக்குழு கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு தென்னை விவசாயிகள் சங்கத்தின் மாநிலக்குழு கூட்டம், மாநில தலைவர் எஸ்.ஆர்.மதுசூதனன் தலைமையில் திருச்செங்கோட்டில் புதனன்று நடைபெற்றது.
இதில், ஒன்றிய அரசு தென்னை வளர்ச்சி வாரியம் பயிர் காப்பீடு திட்டம் அறிவித்து பெருமை பேசுகிறது. ஆனால், பயிர் காப்பீடு திட்டத்தை செயல்படுத்துவதில் எவ்வித முனைப்பும் காட்டுவதில்லை. தென்னை சார் தொழில்களை மாவட்டங் கள் தோறும் உருவாக்க வேண்டும், தென்னையில் வேர் அழுகல் உள்ளிட்ட பல்வேறு நோய்கள் தாக்கு தல் உள்ள நிலையில், தமிழ்நாட்டில் உள்ள அனைத்து தென்னை மரங்களை யும் பயிர் காப்பீடு திட்டத்தில் ஒன்றி ணைக்க வேண்டும், தேங்காய் எண்ணெ ய்யை நியாய விலை கடைகளில் வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, அக்டோபர் 20 ஆம் தேதி பொள்ளாச்சி, விருதுநகர், தஞ்சாவூர், நாகர்கோவில், ஈரோடு ஆகிய ஐந்து இடங்களில் ஆர்ப்பாட்டம் நடத்துவது என்று மாநிலக்குழு கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டுள்ளது.
இக்கூட்டத்தில், தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாநில பொதுச் செயலாளர் சாமி நடராஜன், மாநிலச் செயலாளர் விஜய முருகன், நாமக்கல் மாவட்டச்செயலாளர் ஆதி நாராயணன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.