districts

நீரேற்று நிலையத்தில் நகர்மன்றத் தலைவர் ஆய்வு

நாமக்கல், ஜூன் 12- திருச்செங்கோடு நகராட்சி பகுதிகளுக்கு குடிநீா் விநியோகிக்கும் சந்தைப்பேட்டை நீரேற்று நிலையத்தில் நகர்மன்றத் தலைவர் நளினி சுரேஷ்பாபு ஆய்வு செய்தார்.

நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு நகரில் 19 ஆயிரத்து 629 குடிநீர் இணைப்புகள் உள்ளன. இந்த இணைப்புகளுக்கு ஆவத் திபாளையம், புல்லாகவுண்டன்பட்டி நீரேற்று நிலையங்களில் இருந்து குடிநீர் விநியோ கிக்கப்பட்டு வருகிறது. இந்த இரு நீரேற்று நிலையங்களில் இருந்து வரும் குடிநீர் சந்தைப்பேட்டையில் உள்ள நீரேற்று நிலை யத்தில் இருந்து திருச்செங்கோடு நகருக்குக் கொண்டு வரப்படுகிறது. கடந்த சில நாட்க ளாக குடிநீர் விநியோகம் சீராக இல்லை என பொதுமக்களிடமிருந்து புகார் எழுந்தது. இதையடுத்து சந்தைப்பேட்டை நீரேற்று நிலையத்தில் நகர்மன்றத் தலைவர் நளினி சுரேஷ்பாபு செவ்வாயன்று ஆய்வு மேற்கொண்டார்

அப்போது நகராட்சி பொறியாளர் சரவ ணனிடம், நகராட்சிப் பகுதிகளுக்கு குடிநீர் விநியோகத்தை தடையின்றி வழங்க விரைந்து நடவடிக்கை எடுக்குமாறு நகர்மன் றத் தலைவர் நளினி சுரேஷ்பாபு அறிவு றுத்தினார்..