districts

img

சுற்றுலா மேம்பாடு: ரூ.80 லட்சத்தில் திற்பரப்பு அருவி சாலை சீரமைப்பு

நாகர்கோவில், ஜன. 1- சுற்றுலாத் தலமான திற்  பரப்பு அருவிக்கு செல்லும் சாலையை இணைக்கும் களி யல் முதல் உண்ணியூர் கோணம் வரையிலான 3.5  கி.மீ. சாலையை ரூ.80 லட்சம் மதிப்பில் சீரமைக்கும் பணி யினை அமைச்சர் மனோ  தங்கராஜ் தொடங்கிவைத்  தார். திற்பரப்பு பேரூராட்சி துணைத் தலைவர் ஸ்டா லின் தாஸ், வார்டு உறுப்பி னர் கிருஷ்ணவேணி உள்பட  பலர் கலந்துகொண்டனர். திற்பரப்பு அருவியில் ஏற்படும் போக்குவரத்து நெருக்கடியை தவிர்க்கும் வகையில் திற்பரப்பு சந்திப்பு பகுதியிலிருந்து பெரிய ஏலா  வழியாக அருவிப் பகுதிக்கு செல்லும் பாதையை மேம் படுத்தி ஒருவழிப்பாதையில் வாகனங்களை இயக்குவது தொடர்பாக அமைச்சர் மனோ தங்கராஜ் ஆய்வு செய்தார். அப்போது பேசிய அவர், தமிழக அரசு சார்பில் திற்  பரப்பு அருவியில் பல்வேறு மேம்பாட்டுப் பணிகள் செய் யப்பட உள்ளன. தற்போது அருவிக்கு செல்லும் பாதை யில் மாற்று ஒரு வழிப்பாதை அமைக்கும் வகையில் ஆய்வு செய்யப்பட்டுள்ளது. மேலும் அருவிப் பகுதியில் அறநிலையத்துறை சார்பில் தங்கும் விடுதி (யாத்ரா நிவாஸ்), கட்டுவது என்றும் கூடுதல் கழிப்பறைகள், கோவில் எதிரே உள்ள கல் மண்டபத்திற்கு செல்லும் பாலத்தை சீரமைக்கும் பணி களும் விரைவில் தொடங் கும் என்றார்.