districts

img

பாலியல் குற்றவாளிகள்தான் அஞ்ச வேண்டும் பாதிக்கப்பட்டவர்கள் துணிச்சலாக நிற்க வேண்டும்

நாகர்கோவில், ஜுலை 27- பாலியல் வன்கொடுமைகளுக்கு உள்ளாகி பாதிக்கப்பட்ட குடும்பம் துணிச்சலோடு எதிர்த்து போராட முன்வர வேண்டும். பாலியல் குற்றவாளிகள்தான் அஞ்சவேண்டும். அவர்கள் தான் ஓடி ஒளிவார்கள். பாதிக்கப்பட்டவர்கள் வீட்டை காலி செய்து விட்டு தங்களை தனிமைப்படுத்திக் கொள்ளக் கூடாது என்று அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் அகில இந்திய துணை தலைவர் உ.வாசுகி தெரிவித்தார்.

கன்னியாகுமரி மாவட்டத்தில் செயல் பட்டு வரும் பெண்களின் கல்வி விழிப்பு ணர்வு உரிமைகளுக்கான கூட்டமைப்பு (மலர்) என்னும் தன்னார்வ தொண்டு நிறு வனத்தின் 29 ஆவது ஆண்டு மாநாடு  ஜுலை 26,27 வெள்ளி, சனி ஆகிய 2 நாட் கள் நடைபெற்றது. திருவிதாங்கோடு அருகில் உள்ள வட்டத்தில் நடந்த மாநாட் டுக்கு மலர் அமைப்பின் தலைவர் ஏ.விஜயலட்சுமி தலைமை வகித்தார். 

சிறப்புரையாற்றிய உ.வாசுகி மேலும்  பேசுகையில், பாலியல் வன்கொடுமை களில் பாதிக்கப்படும் குடும்பத்திற்கு அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தால் உதவ முடிகிறது. அத்தகைய குடும்பங்களுக்கு பக்கபலமாக நின்று நீதியை பெற்றுத்தர முடிகிறது.

சில இடங்களில் உறவினர்களால், அக்கம்பக்கத்தினரால் பாலியல் வல்லு றவுக்கு உள்ளாகும் பெண்கள் வெளியில்  சொல்லாமல் தங்களுக்குள் குமுறிக் கொண்டிருப்பார்கள். தவறு செய்தவர் களை தண்டனைக்குள்ளாக்க வேண்டும்  என்கிற துணிச்சல் பெற வேண்டும். பாதிக் கப்பட்ட பெண்ணையே குற்றவாளியாக சித்தரிக்கும் போக்குக்கு எதிராகவும் குரல்  கொடுக்க வேண்டும். இதுபோன்ற சமூக பிரச்சனைகளில் தலையீடு செய்வதற்கு ஜனநாயக மாதர் சங்கத்துடன் ஒத்து ழைக்க வேண்டும். மலரும் மாதர் சங்க மும் இணைந்து செயல்பட்டால் குமரி  மாவட்டத்தை அதுபோன்ற வன்முறை கள் இல்லாத மாவட்டமாக மாற்ற முடியும். பெண்களுக்கும் குழந்தைகளுக்கும் பாதுகாப்பான மாவட்டமாக மாறும்.

விலைவாசி கடுமையாக உயர்ந்து வரும் நிலையில் விலையை குறைப்ப தற்கான எந்த அறிவிப்பும் ஒன்றிய அர சின் பட்ஜெட்டில் இடம்பெறவில்லை. மாறாக உணவுக்கான மானியம் கடந்த ஆண்டைவிட 7 ஆயிரம் கோடி ரூபாய் இந்த பட்ஜெட்டில் குறைக்கப்பட்டுள்ளது. உரத்துக்கான மானியம் 25 ஆயிரம் கோடி வெட்டி குறைக்கப்பட்டுள்ளது. இவை நமது வாழ்க்கையில் அன்றாடம் பாதிப்புகளை ஏற்படுத்தக்கூடியதாகும். நூறுநாள் வேலை கிராமப்புற பெண் களுக்கு மிகப்பெரிய உதவியாக உள்ளது.  ஆனால், அதற்கான நிதி ஒதுக்கீடு குறைக் கப்பட்டுள்ளது.

அம்பானி, அதானி வளர்ச்சி

நாடு வளர்ந்திருக்கிறது என்பது உண்மைதான். ஆனால், அது சீராக இல்லை. அம்பானி, அதானிகளுக்கான வளர்ச்சி இது. உடலின் ஒரு பகுதியில் மட்டும் வளர்ச்சி இருந்தால் அது வளர்ச்சி அல்ல வீக்கம். அப்படித்தான் இன்றைய வளர்ச்சி உள்ளது. இதுபோன்ற வீக்கத்தை ஓரளவேனும் குறைக்க செல்வ  வரி விதிக்கப்பட்டிருந்தது. அதை  ரத்து செய்துவிட்டார்கள். கார்ப்பரேட்டு களுக்கான வரி இந்த பட்ஜெட்டில் 5 சத விகிதம் குறைக்கப்பட்டிருக்கிறது. இப்ப டியே சென்றால் சூப்பர் பணக்காரர்கள் இன்னும் சூப்பராவார்கள். இல்லாத வர்கள் இன்னும் ஏழ்மையை அனுபவிப் பார்கள். அதனால்தான் அண்மையில் நடந்த ஜி 20 மாநாட்டில் அனைத்து நாடு களும் செல்வ வரி விதிக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது. உலக அளவில் இந்த  கருத்து முன்னுக்கு வரும்போது இந்தியா வில் அதற்கு மாறாக நடந்து கொண்டிருக் கிறது. வசதியானவர்களிடம் வரியாக வசூ லித்து இல்லாதவர்களுக்கு வழங்க வேண் டும். உள்ளூர் அளவில் இதைப் பேச வேண்டும்.

தேர்தல் நடந்து முடிந்திருக்கிறது. தேர்தலின்போது ஆளுகிற கட்சி கோயில்,  மதம், சாதி என்பதையெல்லாம் முன்னி றுத்தினார்கள். ஆனால், பெரும்பான்மை யான மக்கள் அதற்கு வாக்களிக்கவில்லை. எதிராக வாக்களித்திருக்கிறார்கள். கார ணம் கடுமையான விலைவாசி உயர்வு, வரலாறு காணாத வேலையில்லா திண் டாட்டம், யாராவது கேள்வி கேட்டால் சிறை யில் அடைக்கும் எதேச்சதிகாரம் கோ லோச்சுகிறது. அரசமைப்பு சட்டத்தை சிதைக்கும் முயற்சி வெற்றி பெற்றால் இட ஒதுக்கீடு இருக்காது, சிறுபான்மை மக்களின் பாதுகாப்பாக வாழ முடியாது,  சமூக நீதி இருக்காது, என்பதை யெல்லாம் உணர்ந்து மாற்றி வாக்களித் திருக்கிறார்கள். சாதி மதங்களைக் கடந்து  நமது பிரச்சனைகளை களத்தில் முன் வைக்க வேண்டும். அதற்கு உண்மை யாக பாடுபடுகிறவர்களை ஆதரிக்க வேண்டும்.

இவ்வாறு வாசுகி பேசினார்.

மாநாட்டில், மாவட்ட முதன்மை வங்கி  (ஐஓபி) மேலாளர் எஸ்.செல்வராஜ், நபார்டு உதவி பொதுமேலாளர் ஆர்.கே.சுரேஷ் ராமலிங்கம், தமிழ்நாடு அறிவியல் இயக் கத்தின் மாவட்ட தலைவர் நாகராஜன், மாவட்ட தொழில் மைய பொது மேலாளர் ஏ.பெர்பெர்ட், கால்நடைத்துறை மண்டல இயக்குநர் ராதாகிருஷ்ணன்.  மலர் ஆலோசகர் தாமஸ் பிராங்கோ, மாவட்ட செயலாளர் ஜே.ஜினோபாய், துணை  தலைவர் ஜே.ஜான்சிலி பாய், ஜே.எட்வின் ஜெயகுமார் உள்ளிட்டோர் பேசினர்.