districts

img

சிபிஎம் மூத்த தலைவர் என்.முருகேசன் எழுதிய ‘மண்டைக்காட்டம்மன் வரலாறு’ நூல் வெளியீடு

நாகர்கோவில், ஜுன் 22-      மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் குமரி மாவட்ட முன் னாள் செயலாளரும் மணவாளக்குறிச்சி பேரூராட்சி முன் னாள் தலைவருமான என்.முருகேசன் எழுதிய ‘மண்டைக் காட்டம்மன் வரலாறும் வர்ணாசிரம ஆக்கிரமிப்பும்’ என்கிற நூல்  வெளியீட்டு விழா ஜுன் 21 வெள்ளியன்று நடை பெற்றது.  மார்த்தாண்டம் மதிலகத்தில் தமிழ்நாடு முற் போக்கு எழுத்தாளர் -கலைஞர்கள் சங்கம் சார்பில் நடை பெற்ற விழாவுக்கு சங்கத்தின் மாவட்டச் செயலாளர் ஜெ. ஜெயகாந்தன் தலைமை வகித்தார். மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் மாநிலச் செயற்குழு உறுப்பினர் க.கன கராஜ் புத்தகத்தை வெளியிட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஏ.வி.பெல்லார்மின் பெற்றுக்கொண்டார்.

புத்தகத்தை அறிமுகம் செய்து சிஐடியு மாநிலக்குழு உறுப்பினர் பி.இந்திரா பேசினார். தமுஎகச குமரி மாவட்ட துணைத்தலைவர் குமரி எழிலன் வாழ்த்திப் பேசினார். சிபிஎம் மாவட்ட செயலாளர் ஆர்.செல்லசுவாமி மற்றும் பலர் பங்கேற்றனர்.