districts

img

மக்களை வெளியேற்றி விட்டு புலிகள் சரணாலயமா?

நாகர்கோவில், ஆக. 30 - வன உரிமைச்சட்டம் 2006, வன உயிரின பாதுகாப்பு சட்டம் - 1972 ஆகியவற்றுக்கு எதிரான வகையில், மக்களை வெளியேற்றிவிட்டு புலிகள் சரணாலயம் அமைக்கும் முடிவை தேசிய புலிகள் பாதுகாப்பு ஆணை யம் கைவிட வேண்டும் என தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாநிலத் தலைவர் பெ. சண்முகம் ஒன்றிய அரசை வலியுறுத்தி உள்ளார்.

தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாநிலக்குழு கூட்டம், ஆகஸ்ட்  29, 30 ஆகிய தேதிகளில் கன்னியாகுமரி யில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை விளக்கி, சங்கத்தின் மாநிலத் தலைவர்  பெ. சண்முகம் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்தார். அதில், அவர் கூறிய தாவது: 

மாநிலங்களுக்கு  ஒன்றிய அரசு நெருக்கடி

தமிழ்நாட்டில் 5 புலிகள் காப்பகங் கள் உள்ளன. நாடு முழுவதும் 60-க்கும் மேற்பட்ட புலிகள் காப்பகங்கள் உள் ளன. இவற்றில் இருந்து லட்சக்கணக் கான ஆதிவாசி மக்களையும் வனத்தைச் சார்ந்து வாழும் இதர சமூ கத்தினரையும் வெளியேற்ற தேசியப் புலிகள் பாதுகாப்பு ஆணையம் 19.06.2024 தேதியிட்ட கடிதத்தின் மூலம் மாநில அரசுகளுக்கு உத்தரவிட்டுள் ளது. ஒன்றிய அரசின் இந்த செயலுக்கு தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாநி லக்குழு கண்டனத்தை தெரிவிக்கிறது.

புலிகள் சரணாலயமாக இருந்தா லும் அல்லது வேறு சரணாலயமாக இருந்தாலும் அங்கு வசிக்கும் மக்க ளின் ஒப்புதல் இல்லாமல் வெளி யேற்ற முடியாது என்று ‘வன உரிமைச் சட்டம் -2006’, ‘வன உயிரின பாது காப்பு சட்டம்- 1972’ ஆகியவை மக்க ளின் வாழ்வுரிமைக்குப் பாதுகாப்பு அளித்துள்ளன.

தமிழ்நாட்டில் மேகமலை புலிகள் சரணாலயம், முதுமலை புலிகள் சரணா லயம், களக்காடு - முண்டந்துறை புலி கள் சரணாலயம், பெரியாறு புலிகள் சரணாலயம் ஆகியவற்றில் வசிக்கும் பல லட்சக்கணக்கான மக்களை ஆக்கிர மி்ப்பாளர்கள் என்று முத்திரை குத்தி வெளியேற்றும் ஆபத்து உள்ளது. பல தலைமுறைகளாக வாழ்ந்து வரும் மக்களின் வாழ்வாதாரத்தையும் வாழும் உரிமையையும் அங்கீகரித்து பட்டா வழங்க வேண்டிய ஆட்சியா ளர்கள் அதை வழங்காமல் அலட்சி யப்படுத்தியதன் விளைவுதான் இந்த நெருக்கடிக்கு காரணம்.

சுற்றுலாவுக்கு திறந்து  விடப்படும் வனங்கள்

புலிகள் பாதுகாப்பு, வனங்கள் பாது காப்பு என்ற பெயரில் மக்களை வெளி யேற்றத் துடிக்கும் ஒன்றிய - மாநில அரசுகள் சுரங்கங்கள், குவாரிகள், மின் உற்பத்தி திட்டங்கள் என்ற பெயரில் தனியாருக்கு தாரை வார்க்கும் வகையில் சட்ட திருத்தங்களையும் உத்தரவுகளையும் பிறப்பிக்கின்றன. சரணாலய பகுதிகளில் இருந்து ஆதி வாசிகளை வெளியேற்றிவிட்டு, சுற்றுலா பயணிகளை ஈர்த்து வனத்தை வருமானத்திற்காக பயன்படுத்திக் கொள்வது ஒன்றிய, மாநில அரசு களின் கொள்கைகளாக உள்ளன.

கிருஷ்ணகிரி, தருமபுரி மாவட்டங் களில் வனவிலங்கு சரணாலயப் பகுதி களில் இருந்து மக்களை வெளியேற்ற வேண்டும் என வனத்துறை நோட்டீஸ் வழங்கி இருப்பது சட்டவிரோதமானது - கண்டனத்துக்குரியது. தமிழ்நாடு அரசு இப்பிரச்சனையில் உரிய கவனம் செலுத்தி, ஆதிவாசிகள் மற்றும் வனத்தைச் சார்ந்து வாழும் மக்களின் குடியுரிமையையும் வாழ்வா தாரத்தையும் பாதுகாக்க வேண்டும். 

இவ்வாறு பெ. சண்முகம் தெரிவித்தார்.

முதல்வருக்குப் பாராட்டு

அத்திக்கடவு - அவிநாசி திட்டத்தை தமிழக முதல்வர் துவக்கி வைத்ததை வரவேற்றும், பரந்தூர் பசுமை விமான நிலையத்திற்கு நிலம் எடுக்கக் கூடாது என போராடும் விவசாயிகளுக்கு ஒருமைப்பாடு தெரிவித்தும், இதில், பொதுமக்கள் மீது காவல்துறை வழக்கு போடுவதை கண்டித்தும், இலவச மின் இணைப்பு மற்றும் தட்கல் திட்டத்தில் விண்ணப்பம் செய்த விவசாயிகளுக்கு உடனடியாக மின் இணைப்பு வழங்கிட வேண்டும் என வலியுறுத்தியும் கூட்டத்தில் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டதாக பெ. சண்முகம் தெரிவித்தார்.   பேட்டி யின்போது அகில இந்திய விவசாயிகள் சங்கத்தின் அகில இந்திய துணைத் தலைவர் டி. ரவீந்திரன், மாநிலப் பொதுச்செயலாளர் சாமி. நடராஜன், பொருளாளர் கே.பி. பெருமாள், குமரி மாவட்டத் தலைவர் எஸ்.ஆர். சேகர், மாவட்டச் செயலாளர் ஆர். ரவி உடனிருந்தனர்.

செப். 25 அன்று தில்லியில் ஆர்ப்பாட்டம்

வன விலங்குகளால் ஏற்படும் உயிரிழப்புகளுக்கு மாநில அரசு வழங்குவதுபோல் ஒன்றிய அரசும் பத்து லட்சம் ரூபாய் வழங்க வேண்டும்; வன விலங்குகளால் ஏற்படும் பயிரிழப்புகளுக்கான இழப்பீட்டை காப்பீட்டுத் திட்டங்களில் இணைத்து விவசாயத்தைப் பாதுகாக்க வேண்டும் என வலியுறுத்தி அகில இந்திய விவசாயிகள் சங்கம் செப்டம்பர் 25 அன்று தில்லியில் ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளது. இதில் தமிழ்நாட்டில் இருந்து 500 விவசாயிகள் பங்கேற்க முடிவு செய்யப்பட்டுள்ளது.