districts

img

நூறுநாள் வேலையில் முறைகேடுகளை களைக! நகர்ப்புற வேலை உறுதித்திட்டத்தை அமலாக்குக

நாகர்கோவில், ஜுலை 30 - நூறுநாள் வேலைக்கு ஒதுக்கும் பணத்தில் கட்டுமானப் பணிகளை செய் கிறார்கள். இத்தகைய முறைகேடு களை தடுத்து நிறுத்த வேண்டும். இல்லையென்றால் மாநிலம் முழு வதும் போராட்டம் நடத்தப்படும் என அகில இந்திய விவசாயத் தொழி லாளர் சங்கத்தின் மாநிலத் தலைவர் எம்.சின்னதுரை கூறினார். 

ஊரக வேலைத் திட்டத்தில் வேலை யின்றி திண்டாடிவரும் அனைத்து தொழிலாளர்களுக்கும் உடனடியாக வேலை வழங்க வேண்டும். நிலுவை யில் உள்ள சம்பள பாக்கியை உடனே வழங்க வேண்டும். நகர்ப்புறங்களிலும் வேலைவாய்ப்பு திட்டம் அமல்படுத்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஜுலை 30 (செவ்வாய்) அன்று நாகர்கோவிலில் உள்ள கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் அலு வலகம் முன்பு அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கத்தின் மாவட்டச் செய லாளர் மலைவிளைபாசி தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

எம்.சின்னதுரை எம்எல்ஏ

அப்போது சிபிஎம் கந்தர்வ கோட்டை சட்டமன்ற உறுப்பினர் எம்.சின்னதுரை பேசியதாவது: 

கன்னியாகுமரி மாவட்டத்தில்தான் முதன்முதலாக பேரூராட்சி, நகராட்சி, மாநகராட்சிகளில் வேலை உறுதித் திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை எழுப்பப்பட்டது. இந்தியாவில் வேறெங்கும் இப்படி ஒரு கோரிக்கை முன்வைக்கப்படவில்லை. இந்த கோரிக்கை நிறைவேறுமா? சாத்தியமானதா என கேள்வி எழுப்பப் பட்டது. இப்போது நகர்ப்புற வேலை வாய்ப்பு தி்ட்டம் கொண்டுவரப் பட்டுள்ளது.

தொடர்ச்சியாக நடத்திய போராட் டங்களின் விளைவாக இப்போது நிதி ஒதுக்கியிருக்கிறார்கள். இந்த மாவட்டத்தில் 51 பேரூராட்சிகள் உள்ள நிலையில், 3 பேரூராட்சிகளுக்கு மட்டுமே நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இதர பேரூராட்சிகளில் வசிக்கும் பட்டி யல் இன, பழங்குடி, பிற்படுத்தப்பட்ட ஏழை-எளிய மக்கள் பயனடையும் விதத்தில் நகர்ப்புற வேலைவாய்ப்புத் திட்டம் அமல்படுத்தப்பட வேண்டும். 

போராட்டத்தில் பங்கேற்றிருக்கும் மக்கள் குடிமனை பட்டா கேட்டு மனுக்க ளுடன் வந்துள்ளார்கள். குடிமனை பட்டா கொடுப்பதற்கு ஏராளமான அரசா ணைகள் உள்ளன. நத்தம் புறம்போக் கில் குடியிருப்போர் அனைவருக்கும் பட்டா வழங்க வேண்டும் என தமிழக அரசு முடிவு செய்து அரசாணையும் பிறப்பித்துள்ளது. இந்த மாவட்டத்தில் நத்தம் புறம்போக்கில் பட்டா கொடுக்க மறுப்பது வியப்பாக உள்ளது. தலை மைச் செயலகத்தில் இதுகுறித்து தெரிவித்து உங்கள் கோரிக்கைகள் நிறைவேற வழிவகை செய்யப்படும்.

நூறுநாள் வேலைக்கு ஒதுக்கும் பணத்தில் கட்டுமானப் பணிகளைச் செய்கிறார்கள். இத்தகைய முறை கேடுகளை தடுத்து நிறுத்த வேண்டும். இல்லையென்றால் கன்னியாகுமரியில் நடப்பது போன்ற போராட்டம் மாநில-ஒன்றிய அரசுகளுக்கு எதிராக தமிழ்நாடு முழுவதும் நடத்தப்படும். 

இவ்வாறு அவர் பேசினார்.

ஆர்ப்பாட்டத்தில் சங்கத்தின் மாவட்டத் தலைவர் என்.எஸ்.கண்ணன், சிபிஎம் மாவட்டச் செயலா ளர் ஆர்.செல்லசுவாமி, சிஐடியு  மாவட்டச் செயலாளர் கே.தங்க மோகனன், தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்டச் செயலாளர் ஆர்.ரவி ஆகியோர் பேசினர். சங்கத்தின் மாவட்டப் பொருளாளர் ஆர்.குமரேசன் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்துகொண்டனர்.