நாகர்கோவில், பிப்.8 கர்நாடக மாநிலத்தில் இருந்து 60 பயணிகள் ஒரு பேருந்தில் கன்னியா குமரிக்கு செவ்வாயன்று சுற்றுலா வந்தனர். இவர்கள் வந்த சுற்றுலா பேருந்து இரவு சுமார் 8 மணி அளவில் அரசு மருத்துவமனைக்கு செல்லும் தோரண நுழைவு வாயில் வழியாக செல்ல முயன்றது. அப்போது அந்த பேருந்தின் மேல் கூரை நுழைவாயிலின் மேல் பகுதியில் மோதியது. இதில் அந்த நுழைவாயிலின் மேல் பகுதி சுற்றுலா பேருந்தின் மீது இடிந்து விழுந்தது. இதை பார்த்த சுற்றுலா பயணிகள் அலறி அடித்துக் கொண்டு வெளியே குதித்து உயிர் தப்பினார்கள். இந்த விபத்து நடந்த இடத்துக்கு அருகில் பேருந்து நிறுத்தத்தில் காத்திருந்த பயணிகளும் இதை கண்டு அலறி அடித்துக் கொண்டு ஓடினார்கள். சுற்றுலா பேருந்து விபத் துக்குள்ளான சம்பவம் அந்த பகுதியில் பெரும் பர பரப்பை ஏற்படுத்தியது. இது பற்றி தகவல் அறிந்ததும் கன்னியாகுமரி போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தி னார்கள். அந்த பேருந்தை பல மணி நேரம் போராடி மீட்டனர். இந்த விபத்தில் யாருக்கும் காயம் ஏற்பட வில்லை.