districts

பரளியாறு, குழித்துறை ஆறுகளில் வெள்ளப்பெருக்கு கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

நாகர்கோவில், அக்.25- குமரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாகவே பரவலாக மழை பெய்து வருகிறது. திங்களன்று (அக்.24) மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் மழை பெய்துள்ளது. சுரு ளோட்டில் 2 மணி நேரத்தி ற்கு மேலாக கனமழை கொட்டிய. அங்கு அதிகபட்ச மாக 75.2 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது. பேச்சிப்பாறை பெருஞ் சாணி அணை பகுதியிலும் விட்டு விட்டு மழை பெய்தது. இதனால் அணை களுக்கு மிதமான அளவு தண்ணீர் வந்து கொண்டி ருக்கிறது. ஏற்கனவே பேச்சி பாறை அணை நீர்மட்டம் 42 அடியை கடந்து உள்ள நிலையில் குழித்துறை கோ தையாற்றின் கரையோர பகுதி மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப் பட்டு இருந்தது. இந்த நிலையில் செவ் வாயன்று பெருஞ்சாணி அணையின் நீர்மட்டம் 72 அடியை கடந்தது. இதனால் பரளி ஆறு குழித்துறை ஆற்றின் கரையோர பகுதி மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள் ளது. அருவிக்கரை, திரு வட்டாறு மூவாற்றுமுகம், குழித்துறை, தேங்காய் பட்டணம் கரையோரப் பகுதியில் உள்ள மக்கள் பாதுகாப்பான இடங்களு க்கு செல்லுமாறு பொ துப்பணித்துறை அதிகாரி கள் எச்சரித்து உள்ளனர்.

பெருஞ்சாணி அணையின் நீர்மட்டத்தை 24 மணி நேரமும் கண்காணித்து வருகிறார்கள். அணைக்கு வரும் தண்ணீர் வரத்துக்கு ஏற்ப தண்ணீரை வெளி யேற்றவும் நடவடிக்கை மேற்கொண்டு உள்ளனர். திற்பரப்பு அருவி பகுதி யிலும் சாரல் மழை பெய்து வருகிறது. அருவியில் வெள்ளம் ஆர்ப்பரித்து கொட்டி வருகிறது. பேச்சிப் பாறை அணை நீர்மட்டம் செவ்வாயன்று காலை 42.58 அடியாக உள்ளது. அணைக்கு 1102 கன அடி தண்ணீர் வந்து கொண்டி ருக்கிறது. அணையிலிருந்து 482 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. பெருஞ்சாணி அணை நீர்மட்டம் 72.15 அடியாக உள்ளது. அணைக்கு 1241 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து 300 கன அடி தண்ணீர் வெளியேற்றப் படுகிறது. சிற்றார்1-அணையின் நீர்மட்டம் 11.94 அடியாகவும், சிற்றார் 2-அணையின் நீர்மட்டம் 11.94 அடியாகவும் பொய்கை அணை நீர்மட்டம் 16.20 அடியாகவும் மாம்ப ழத்துறையாறு அணையின் நீர்மட்டம் 38.22 அடியாக வும் உள்ளது. நாகர்கோ வில் நகருக்கு குடிநீர் விநி யோகம் செய்யப்படும் முக்கடல் அணையின் நீர்மட்டம் 13.40 அடியாக உள்ளது. மாவட்டம் முழுவதும் பெய்த மழை அளவு: பேச்சிப்பாறை-19 மில்லி மீட்டர், பெருஞ்சானி-32.6, சிற்றார் 1-20.2, பூதப் பாண்டி-25.2, கன்னி மார்-38.6, புத்தன் அணை-30.8, சுருளோடு-75.2, தக்கலை-2 , பால மோர்-62.4, திற்பரப்பு-6, ஆணைக்கிழங்கு-7 மில்லி மீட்டர்.

;