நாகர்கோவில், ஜன.1- கன்னியாகுமரி மாவட்ட உள்நாட்டு மீன வர் ஒருங்கிணைப்பு மையத்தில் இனிப்பு வழங்கி புத்தாண்டு கொண்டாடப்பட்டது. மாவட்ட செயலாளர் டாக்டர் வேல்முரு கன் தலைமையில் கிருஷ்ணன் கோயில் பரதன் தெருவில் கேக் வெட்டி இனிப்பு கள் வழங்கப்பட்டது. மாவட்ட செயலாளர் எஸ்.அந்தோணி, துணைத் தலைவர் பி. சேசு ராஜன், இணை செயலாளர் முத்து, கிருஷ்ணன்கோயில் மகளிர் கிளைச் செயலாளர் மீனா, ஒருங்கிணைப்பு மைய நிர்வாகிகள் மற்றும் ஊர் மக்கள் திரளாக கலந்து கொண்டனர். தமிழ்நாடு சிறுபான்மை மக்கள் நல குழுவின் மாநில பொருளாளர் அகமது உசேன் வாழ்த்துரை வழங்கினார். உடன் சிறுபான்மை மக்கள் நல குழுவின் கன்னி யாகுமரி மாவட்ட நிர்வாகிகள் மீனாட்சி சுந்த ரம் அசிஸ் ஆகியோரும் கலந்து கொண்ட னர். கோவிட் காலத்தில் நோய் தடுப்பு மருந்துகளை இலவசமாகவும் கபசுர குடிநீர் மற்றும் மருத்துவ முகாம்கள் நடத்திய மருத்துவ குழுவில் பணியாற்றிய டாக்டர் பெனிஸ் ராஜாவை பாராட்டி கைத்தறி ஆடை வழங்கி சிறப்பிக்கப்பட்டது.