districts

img

தலைஞாயிறு ஒன்றிய அலுவலகம் முன் மறியல்

வேதாரண்யம், ஜூன் 17- நாகை மாவட்டம் வேதாரண்யம் அடுத்த தலைஞாயிறு ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு காடந்தேத்தியில் அரசு கட்டி கொடுத்துள்ள குடியிருப்பில் 2 மாதங்க ளாக குடிநீர் வழங்காததை கண்டித்து  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஒன்றிய செயலாளர் ஏ.ராஜா தலைமையில் சாலை மறியல் போராட்டம் நடை பெற்றது. போராட்டத்தில், காடந்தேத்தியில் அரசு கட்டி கொடுத்துள்ள குடியி ருப்பில் 2 மாதங்களாக குடிநீர் வழங்காததை கண்டித்தும் மயான கட்டிடம் மயான சாலையை உடன டியாக செய்து கொடுக்க வேண்டும். வேலைவாய்ப்பற்ற மக்களுக்கு 100 நாள் வேலையை தொடங்கு வழங்கிட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கை கள் வலியுறுத்தப்பட்டன. சம்பவ இடத்திற்கு வந்த வேதாரண்யம் டிஎஸ்பி முருகவேல் தலைமையில் ஊராட்சி ஆணையர் செல்வராஜ், இணை ஆணையர் ராஜூ,  குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள், அரசு அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் உடனடியாக குடிநீர் மற்றும் 100 நாள் வேலை வழங்கப் படும் என உறுதி அளித்ததன் பேரில் தற்காலிகமாக சாலை மறியல் கைவிடுவதாக போராட்டக்காரர்கள் தெரிவித்தனர். போராட்டத்தில் பி.முருகதாஸ், ஆர்.கருணாநிதி, டி.சந்தன சுவாமி உள்ளிட்ட 200க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.