வேதாரண்யம், மே 13 - நாகப்பட்டினம் மாவட்டம் வேதா ரண்யத்தை அடுத்த கோடியக்கரையில் பலத்த கடல் சீற்றம் காரணமாக கடலில் உள்ள சங்குகள் கரை ஒதுங்கியுள்ளன. வியாழனன்று கடல் உள்வாங்கிய நிலை யில், வெள்ளிக்கிழமை கடல் சீற்றத்துடன் காணப்பட்டதால், கடலில் உள்ள சங்குகள் கரை ஒதுங்கியுள்ளன. இது மீனவர்கள் மத்தியில் அச்சம் ஏற்படுத்தியுள்ளது. புயல் கரையை கடந்துவிட்ட நிலையிலும் கடல் சீற்றத்துடன் காணப்பட்டது. கோடியக்கரை, மணியன் தீவு, ஆறுகாட்டுத்துறை, புஷ்ப வனம், வெள்ளப்பள்ளம், சிறுதலைக்காடு, அண்ணாபேட்டையைச் சேர்ந்த மீனவர்கள் தங்களுடைய படகுகளை பாதுகாப்பான இடத்தில் நிறுத்தி வைத்துள்ளனர்.