districts

img

குடிநீர், சாலை, மின்விளக்கு வசதி செய்து தருக! நாகப்பட்டினம் முழுவதும் சிபிஎம் கோரிக்கை விளக்க ஆர்ப்பாட்டம்

நாகப்பட்டினம், டிச.5- நாகப்பட்டினம் மாவட்டத்தின் பல பகுதிகளில் குடிநீர், சாலை, மின்சாரம் உள்ளிட்ட மக்களுக்கான அடிப்படை வசதிகள் செய்து தர வேண்டும் என  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் கோரிக்கை விளக்க ஆர்ப்பாட் டம் நடைபெற்றது.  நாகை தெற்கு ஒன்றியம் சார்பில் 10 இடங்களில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. புதுச்சேரி ஊராட்சியில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு எஸ்.என்.ஜீவாராமன் தலைமை வகித்தார். நாகை மாவட்டச் செயலாளர் வி.மாரிமுத்து கோரிக்கை உரையாற்றினார். நாகை தெற்கு ஒன்றியச் செயலாளர் ஏ.வடிவேல் கலந்து கொண்டார்.  நாகை வடக்கு ஒன்றியம் சார்பில் சிக்கல் மின்வாரிய அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு வடக்கு  ஒன்றியச் செயலாளர் வி.வி.ராஜா தலைமை வகித்தார். மாவட்டச் செயற் குழு உறுப்பினர் ப.சுபாஷ் சந்திரபோஸ் உரையாற்றினார்.  கீழ்வேளூர் தெற்கு ஒன்றியம் சார்பில்  15 இடங்களில் ஆர்ப்பாட்டம் நடை பெற்றது. ஆதமங்கலத்தில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு கீழ்வேளூர் தெற்கு  ஒன்றிய செயலாளர் ஆர்.முத்தையன்  தலைமை வகித்தார். மாவட்டச் செயற் குழு உறுப்பினர் வி.சுப்பிரமணியன் உரை யாற்றினார்.  கீழ்வேளூர் வடக்கு ஒன்றியத்தில் 4 இடங்களில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இருக்கை கிராமத்தில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு கீழ்வேளூர் வடக்கு  ஒன்றிய செயலாளர் என்.எம்.அபுபக்கர்  தலைமை வகித்தார். நாகை மாவட்டச்  செயலாளர் வி.மாரிமுத்து உரையாற்றி னார்.  கீழையூர் மேற்கு ஒன்றியத்தில் 10 இடங்களில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கீழையூர் மேற்கு ஒன்றிய செயலாளர் டி. வெங்கட்ராமன், மாவட்டக் குழு உறுப்பி னர் சித்தார்த்தன் ஆகியோர் ஆர்ப்பாட்ட உரையாற்றினர்.  கீழையூர் கிழக்கு ஒன்றியத்தின் சார்பில் பிரதாபராமபுரம் ஊராட்சியில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஒன்றியச் செயலாளர் எம்.அப்துல் அஜீஸ் உரை யாற்றினார். வேதாரண்யம் வடக்கு ஒன்றியத்தின் சார்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் வடக்கு ஒன்றியச் செயலாளர் வெற்றிய ழகன் தலைமை வகித்தார். மாவட்டச் செயற்குழு உறுப்பினர் கோவை.சுப்பிர மணியன் பேசினார்.  தலைஞாயிறு ஒன்றியத்தில் 3 மூன்று  இடங்களில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஒன்றியச் செயலாளர் ஏ.ராஜா, ஒன்றியச்  செயலாளர் ஸ்டாலின்பாபு ஆகியோர் கண்டன உரையாற்றினார்.