நாகப்பட்டினம், டிச.10 - நாகப்பட்டினம் மாவட்டம் பாப்பா கோவில் ஊராட்சியில் உள்ள அகில இந்திய விவசாயத் தொழிலாளர் சங்கத் தின் நாகை மாவட்ட 20 ஆவது மாநாடு நடைபெற்றது. மாநாட்டு கொடியை மூத்த தோழர் பி.கே.ராஜேந்திரன் ஏற்றி வைத்தார். மாவட்டத் தலைவர் ஏ.வேணு தலைமை வகித்தார். நாகை தெற்கு ஒன்றிய செய லாளர் கே.செந்தில்குமார் வரவேற்றார். மாநாட்டை துவக்கி வைத்து விவசாயத் தொழிலாளர் சங்கத்தின் மாநிலத் தலைவர் ஏ.லாசர் உரையாற்றினார். மாவட்டச் செயலாளர் எம்.முருகை யன் வேலை அறிக்கை சமர்ப்பித்தார். நூறு நாள் வேலையை 200 நாட்க ளாக உயர்த்த வேண்டும். நாள் ஒன்றுக்கு ரூ.600 ஊதியம் வழங்க வேண்டும். 60 வயதான விவசாயத் தொழிலாளிகளுக்கு மாத ஓய்வூதி யம் வழங்க வேண்டும். குடிமனை இல்லாதவர்களுக்கு அரசே குடிமனை வழங்க வேண்டும். அரசு புறம்போக்கு நிலங்களில் இருப்பவர்களுக்கு குடி மனை பட்டா வழங்கிட வேண்டும். விவசாய தொழிலாளர் நலத்துறை என்ற துறையை அரசு உருவாக்கிட வேண்டும். வேளாண் உற்பத்தி பொருட் களுக்கு கட்டுபடியாகிற விலையை அரசு தீர்மானித்திட வேண்டும். நெல் குவிண்டாலுக்கு ரூபாய் 3000 வழங்கிட வேண்டும். நிலமற்ற ஏழைகளுக்கு நிலம் கிடைத்திட நில உச்சவரம்பு சட்டத்தை இயற்றிட வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப் பட்டன. கீழ்வேளூர் சட்டமன்ற உறுப்பினர் வி.பி.நாகைமாலி, விச மாவட்டச் செய லாளர் கோவை.சுப்பிரமணியன், சிஐடியு மாவட்டச் செயலாளர் கே.தங்க மணி, விதொச மாநில நிர்வாகி வி.மாரி யப்பன் உள்ளிட்டோர் மாநாட்டை வாழ்த்தி பேசினர். மாநில பொதுச் செயலாளர் வி.அமிர்தலிங்கம் நிறை வுரையாற்றினார். மாவட்டத் தலைவராக கே.சித்தார்த் தன், செயலாளராக எம்.முருகையன், பொருளாளராக கே.செந்தில்குமார் உள்ளிட்ட புதிய நிர்வாகிகள் தேர்ந்தெ டுக்கப்பட்டனர்.