districts

img

நாகை தமிழ் சங்கத்தின் முப்பெரும் விழா

நாகப்பட்டினம், ஜன.7- நாகப்பட்டினம் தமிழ்ச் சங்கம் சார்பில் இளஞ்சேரனார் நூற்றாண்டு, நூல் வெளியீடு, தமிழ் ஆர்வலர்களுக்கு பாராட்டு விழா என முப்பெரும் விழா நடைபெற்றது. தமிழ்ச் சங்கத்தின் தலைவர் கவிஞர் ஆவராணி ஆனந்தன் தலைமை வகித்தார். தமிழ்ச்சங்க செயலாளர் ந.த.வீரமணி வரவேற்றார். கோவை இளஞ்சேரனார் மாணவர்களான முன்னாள் அமைச்சர்கள் இரா.ஜீவானந்தம், கே.ஏ.ஜெயபால், மீன் வளர்ச்சி கழக தலைவர் என்.கௌதமன், நாகை சட்டமன்ற உறுப்பினர் ஆளூர் ஷாநவாஸ், சட்டமன்ற முன்னாள் உறுப்பினர் எம்.ஜி.கே.நிஜாமுதீன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.  மறைமலை அடிகளார் பேரன் மறை.திருநாவுக்கரசு எழுதிய, ‘‘தனித்தமிழ் இயக்க வேர்களும் விழுதுகளும்’’ என்ற நூல் வெளியிடப்பட்டது.

;