districts

img

நகரும் நியாய விலை அங்காடியை நாகைமாலி எம்எல்ஏ தொடங்கி வைத்தார்

நாகப்பட்டினம், ஆக.24 - அணக்குடி ஊராட்சியில் நகரும் நியாய விலை அங்காடியை கீழ்வேளூர் சட்டமன்ற உறுப்பினர் வி.பி.நாகைமாலி தொடங்கி வைத்தார். நாகப்பட்டினம் மாவட்டம் கீழ்வேளூர் சட்டமன்றத்திற்கு உட்பட்ட ஊராட்சிகளில் குடும்ப அட்டைதாரர்களுக்கு, அவர்களுடைய வீட்டிலேயே ரேசன் பொருட்களை கொண்டு சேர்க்கும்  நகரும் நியாய விலை அங்காடியை கீழ்வேளூர் சட்டமன்ற உறுப்பினர் வி.பி.நாகைமாலி தொடங்கி வைத்தார். இரிஞ்சூர் கூட்டுறவு சொசைட்டிக்கு உட்பட்ட அணக்குடி கிராமத்தில் நகரும் நியாய விலை கடை அங்காடி திட்டம் தொடங்கப்பட்டது. நியாய விலைக் கடைகளுக்கும் மக்களின் வசிப்பிடத்திற்கும் தூரமாக இருக்கும் பட்சத்தில் இத்திட்டம் பயனளிக்கும் வகையில் உள்ளது. இரிஞ்சூர் நியாய விலைக் கடையிலிருந்து இருந்து, ஒன்றரை கி.மீட்டர் தூரத்தில் உள்ள அணக்குடி கிராமத்திற்கு இத்திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது. முதற்கட்டமாக 115 குடும்ப அட்டைதாரர்களுக்கு நகரும் நியாய விலைக் கடை மூலமாக ரேசன் பொருள் வழங்கும் திட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்நிகழ்வில் மாவட்ட ஆட்சியர் மருத்துவர் அருண் தம்புராஜ், வருவாய் கோட்டாட்சியர் உட்பட கூட்டுறவு துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

;