tamilnadu

img

வாகனங்களில் ஸ்டிக்கர் ஒட்டத் தடை கோரிய வழக்கு - தமிழ்நாடு அரசு பதிலளிக்க உத்தரவு

தனியார் வாகனங்களில் ஸ்டிக்கர் ஒட்டத் தடை விதிக்கும் நடவடிக்கையை தமிழ்நாடு முழுவதும் அமல்படுத்த கோரிய வழக்கில் தமிழ்நாடு அரசு 4 வாரத்துக்குள் பதிலளிக்கும்படி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தனியார் வாகனங்களில் காவல்துறை, அரசு, ஊடகம், வழக்கறிஞர் என ஸ்டிக்கர் ஒட்டக் கூடாது எனவும், மீறினால் அபராதம் விதிக்கப்படும் எனவும் சென்னை போக்குவரத்து காவல் துறை சமீபத்தில் அறிவித்துள்ளது. இந்த நிலையில், தனியார் வாகனங்களில் ஸ்டிக்கர் ஒட்டத் தடை விதிக்கும் நடவடிக்கையை தடையை அமல்படுத்த கோரிய சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இந்த மனுவை விசாரித்த உயர்நீதிமன்றம் தமிழ்நாடு அரசு 4 வாரத்துக்குள் பதிலளிக்கும்படி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டு விசாரணையை ஒத்திவைத்தது.
 

;