districts

img

பழுதடைந்த மின்கம்பம் பொதுமக்கள் அச்சம்

நாகப்பட்டினம் நகராட்சிக்குட்பட்ட புளியமரத்துகோடி 1 ஆவது சந்தில் நீண்ட காலமாக ஒரு மின்கம்பம் மிகவும் பழுதடைந்த நிலையில் பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் இருந்தது. இதனையறிந்து சிபிஎம் நாகை நகர செயலாளர் க.வெங்கடேசன், உதவி மின் செயற்பொறியாளரிடம், சிபிஎம் நகர குழு சார்பில் புதிய மின் கம்பம் அமைக்க கோரி மனு கொடுத்திருந்தார். மனுவினை பரிசீலித்த மின்சார வாரிய அதிகாரிகள், அந்த இடத்தில் புதிய மின்கம்பம் நடுவதற்கான பணிகளை மேற்கொண்டு, உடனடியாக புதிய மின் கம்பம் நடப்பட்டது.