நாகப்பட்டினம், டிச.1- நாகப்பட்டினம் மாவட்டம் மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் வடக்கு ஒன்றியக் குழு சார்பில் பெருங்கடம்பனூர் ஊராட்சியில் கிராம பேரவைக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு கிளைச் செயலாளர் பி.பரசுராமன் தலைமை வகித்தார். நாகை வடக்கு ஒன்றியச் செய லாளர் வி.வி.ராஜா முன்னிலை வகித்தார். நாகை மாவட்டச் செயலாளர் வி.மாரிமுத்து சிறப்புரையாற்றினார். கூட்டத்தில், தீக்கதிர் நாளேட்டின் எண் ணிக்கையை அதிகப்படுத்துவது, பெருங்கடம்ப னூர் ஊராட்சியில் உள்ள குளங்களில் ஆகாய த்தாமரையை அப்புறப்படுத்துவது, பள்ளி மற்றும் கல்லூரிக்கு செல்லும் மாணவ-மாணவியர், நாகை நகரத்திற்கு வேலைக்கு செல்லும் பெண்கள் மற்றும் பொதுமக்களுக்கு வசதியாக திருவாரூரில் இருந்து வரும் பேருந்தை நாகை வரை நீட்டிப்பது உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன. நிகழ்வில், மாவட்டச் செயற்குழு உறுப்பினர் ப.சுபாஷ் சந்திரபோஸ், மாவட்டக் குழு உறுப்பி னர்கள் சுபாதேவி, தமிழ்ச்செல்வி, பெருங்கடம்ப னூர் ஊராட்சி மன்ற தலைவர் தீபா மாரிமுத்து உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.