திரிபுராவில் ஆர் எஸ் எஸ்-பிஜேபி குண்டர்கள் நடத்தும் வன்முறை வெறியாட்டத்தைக் கண்டித்து நாகப்பட்டினம் மாவட்டம் கீழ்வேளூரில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கீழ்வேளூர் வடக்கு ஒன்றியச் செயலாளர் என்.எம்.அபுபக்கர் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் மாவட்டச் செயலாளர் வி.மாரிமுத்து, கீழ்வேளூர் சட்டமன்ற உறுப்பினர் வி.பி.நாகைமாலி, மாவட்டச் செயற்குழு உறுப்பினர் ப.சுபாஷ் சந்திரபோஸ் உட்பட ஏராளமானோர் பங்கேற்றனர்.