நாகப்பட்டினம், மார்ச் 19 - அனைத்திந்திய ஜனநா யக மாதர் சங்கம், சிஐடியு, உழைக்கும் பெண்கள் ஒருங் கிணைப்புக் குழு இணைந்து நாகப்பட்டினம் அரசு ஊழியர் சங்க அலுவலக வளாகத்தில் சர்வதேச மக ளிர் தின விழாவை கொண்டா டினர். மாதர் சங்க மாவட்ட தலைவர் எஸ்.சுபாதேவி தலைமை வகித்தார். சம வேலைக்கு சம ஊதியம் வழங்கிட வேண்டும். பாலி யல் வன்கொடுமைகளை தடுத்திட போக்சோ சட்டத்தை அமல்படுத்த வேண்டும். பணி யிடங்களில் வர்மா கமிஷன் அடிப்படையில் புகார் கமிட்டி அமைக்க வேண்டும். பெண்க ளுக்கு 33 சதவீத இட ஒதுக்கீடு அமல்படுத்தி கல்வி வேலைவாய்ப்பில் முன்னு ரிமை வழங்க வேண்டும். ஒன்றிய அரசு பொதுத் துறையை தனியாருக்கு விற்பதை கைவிட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இக்கூட்டம் நடை பெற்றது. இறுதியாக மாதர் சங்க மத்தியக் குழு உறுப்பினர் என்.அமிர்தம் நிறைவுரை ஆற்றினார். சங்க மாவட்ட செயலாளர் டி.லதா, மாவட்ட பொருளாளர் கே.டி.எம் சுஜாதா, மாவட்ட துணைத் தலைவர் ஆர்.வெண்சங்கு, சிஐடியு மாவட்ட செயலாளர் கே.தங்கமணி, மாதர் சங்க மாவட்ட துணை செயலாளர் சி.மாலா, எஸ்.அகிலா ஆகி யோர் கலந்து கொண்டனர்.