districts

img

தோழர் வே.மீனாட்சிசுந்தரம் 10 ஆம் ஆண்டு நினைவு தினம்

நாகப்பட்டினம், நவ.13- மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முதுபெரும் தோழரும், கீழ்வெண்மணி களப்போராளியுமான வே.மீனாட்சிசுந்தரத்தின் 10 ஆம் ஆண்டு நினைவஞ்சலி நாகப்பட்டினம் மாவட்டம் தலைஞாயிறு ஒன்றியம் அருந்தவம்புலத்தில் நடைபெற்றது. ஒன்றுபட்ட தஞ்சை மாவட்டத்தில் நாகை  தாலுகா செயலாளராக பணி யாற்றியவர் வே.மீனாட்சி சுந்தரம்.  1960களில் ஒருங்கி ணைந்த தஞ்சையில் நிலப்  பிரபுத்துவத்தின் உக்கிர மான கொடுமைகளை எதி ர்த்து களமாடியவர். ஒடுக்  கப்பட்ட, தலித் மக்களை பண்ணையடிமை கொடுமை யில் இருந்து மீட்டெடுத்தவர். நிலப் பிரபுத்துவத்தின் உச்சக்கட்ட போராட்டத்தில் எவ்வித சமரசமும் இன்றி, உழைக்கும் மக்களுக்காக குரல் கொடுத்தவர். அப்  போது முதல்வராக இருந்த அறிஞர் அண்ணா, கலைஞர் கருணாநிதி ஆகியோரிடம் சமரச பேச்சுவார்த்தையில் உடன்படாமல் உழைக்கும் மக்களுக்கு ஆதரவாக குரல் கொடுத்தவர். வே.மீனாட்சிசுந்தரம் அவர்களின் பத்தாம் ஆண்டு நினைவஞ்சலி நிகழ்வில் கட்சியின் நாகை மாவட்டச் செயலாளர் வி.மாரிமுத்து, மாவட்ட செயற்குழு உறுப்பி னர்கள் ஏ.வேணு, டீ.லதா, சிஐடியு மாவட்டச் செயலா ளர் கே.தங்கமணி, ஒன்றியச் செயலாளர் ஏ.ராஜா, திருத் துறைப்பூண்டி தெற்கு ஒன்  றிய செயலாளர் காரல்  மார்க்ஸ், சிபிஐ ஒன்றிய செய லாளர் சந்தானகிருஷ்ணன், வாலிபர் சங்க மாவட்ட செய லாளர் அருள்தாஸ், வே. மீனாட்சி சுந்தரத்தின் மகன் ஜோதிபாசு உள்ளிட்டோர் புகழஞ்சலி செலுத்தினர்.