நாகப்பட்டினம், பிப்.2- மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைஞாயிறு முன்னாள் ஒன்றியச் செயலாளர் தோழர் எஸ்.முருகேசனின் 7-ஆம் ஆண்டு நினைவு தினம் வெள்ளப்பள்ளத்தில் நடைபெற்றது. கிளைச்செயலாளர் வீ.செல்வகுமார் தலைமை வகித்தார். மாவட்டச் செயலாளர் வி.மாரிமுத்து எஸ்.முருகேசனின் படத்திற்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார். ஒன்றிய செயலாளர் அ.ராஜா, ஒன்றியக் குழு உறுப்பினர் ஜி.செல்வராஜ், பாங்கல் கிளைச் செயலாளர் பி.எஸ்.டி அசோகன், வாலிபர் சங்க ஒன்றியச் செயலாளர் ஆர்.தங்கதுரை உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.