districts

img

நாகப்பட்டினத்தில் ஒன்றிய அரசை கண்டித்து பிரச்சாரம்

நாகப்பட்டினம், மார்ச் 21- ஒன்றிய அரசின் மக்கள் விரோத  செயல்பாட்டை கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் நாகப் பட்டினம் மாவட்டம் கீழ்வேளூர் வடக்கு ஒன்றியம் சார்பில் இராதா மங்கலம், கோகூர் ஆகிய பகுதிகளிலும், கீழ்வேளூர் தெற்கு ஒன்றியம் சார்பில் தேவூர் கடை தெருவிலும் தெருமுனைப் பிரச்சாரக் கூட்டம் நடைபெற்றது.  இதில் சிபிஎம் நாகை மாவட்டச் செயலாளர் வி.மாரிமுத்து, கீழ்வேளூர் வடக்கு ஒன்றியச் செயலாளர் என்.எம். அபுபக்கர், கீழ்வேளூர் தெற்கு ஒன்றியச் செயலாளர் ஆர்.முத்தையன் மற்றும் மாவட்டக் குழு உறுப்பினர்கள் உட்பட பலர் பங்கேற்றனர்.