districts

நாகையில் வாக்காளர்களுக்கு பணம் கொடுக்க பாஜக முயற்சி இரா. முத்தரசன் கண்டனம்

சென்னை, ஏப்.1- இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செய லாளர் இரா. முத்தரசன் வெளியிட்டிருக்கும்  அறிக்கை வருமாறு:- ஏப்.1 அன்று காலை 9 மணிக்கு நாகப்பட்டினம் நீலா தெற்கு வீதியில் இயங்கி வரும் சாய் டொமஸ்டிக் கேஸ் சப்ளையர் மற்றும் நீலா மேல வடம்போக்கி தெருவில் இயங்கி வரும் பார்வதி இந்தியன் கேஸ் நிறுவனத்தில், வாடிக்கையா ளர்கள் பெரும் கூட்டமாக நிற்பது குறித்து செய்திகள் வந்தது.

இது குறித்து விசாரித்த போது, வாடிக்கையாளர்கள் அனைவரும் ஆதார் அட்டை களை தங்கள் கேஸ் இணை ப்புகளுடன் இணைக்க வேண் டும்; இவ்வாறு இணைத் தால், உடனடியாக அவர் களது வங்கி கணக்கிற்கு ரூ.  300 மானியமாக ஒன்றிய பாஜக அரசிடம் இருந்து கிடைக்கும் என்று கூறி யுள்ளனர்.

ஆனால் இது உண்மைக்கு புறம்பானது. இவ்வாறு மானியம் எதுவும் வழங்கப்படவில்லை. அப்ப டியே, மானியம் வழங்கப் படுவதாக இருந்தாலும், தேர்தல் அறிவிக்கப்பட்ட நிலையில், இது போன்று பொது மக்களிடையே மறை முக ஆதரவு தேடுவது, தேர் தல் நடத்தை விதிமுறை களுக்கு எதிரானது.

இதற்குப் பின்னணியில் பாஜகவினர் இருப்பதாக கூறப்படுகிறது. எனவே, இதுகுறித்து உடனடியாக தேர்தல் ஆணையம் நேர்மை யான விசாரணைக்கு உத்தரவிட வேண்டும். ஊழல் முறைகேடுகள் மற்றும் பணப் பட்டுவாடா செய்யும் முயற்சிகளை தேர் தல் ஆணையம் தடுத்து நிறுத்த வேண்டும் என்றும் இதன் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, தேர்தல் ஆணையத்திற்கு புகார் கடிதம் அனுப்பியுள்ளோம்.