districts

img

சிபிஎம் கட்சியில் இணைந்த மூத்த வழக்கறிஞர்

நாகப்பட்டினம், அக்.8 - நாகப்பட்டினம் மாவட்டத் தின் மூத்த வழக்கறிஞர் கு.காளிதாஸ் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில் தன்னை இணைத்துக் கொண் டார். நாகப்பட்டினம் மாவட்ட  நீதிமன்றத்தின் முக்கிய வழக்கறிஞராக இருந்து பல்வேறு வழக்குகளை திறம்பட நடத்தியவர் இவர். அவருக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு உறுப்பி னர் பி.செல்வசிங் சால்வை அணிவித்து வரவேற்றார். கட்சியின் மாவட்டச் செய லாளர் வி.மாரிமுத்து, கீழ்வே ளூர் சட்டமன்ற உறுப்பினர் வி.பி.நாகைமாலி ஆகி யோர் வாழ்த்தினர். இந்நிகழ்வில் மாவட்ட செயற்குழு உறுப்பினர் ப.சுபாஷ் சந்திரபோஸ், கீழ்வேளூர் வடக்கு ஒன்றிய செயலாளர் என்.எம்.அபு பக்கர், நாகை வடக்கு ஒன்றி யச் செயலாளர் வி.வி.இராஜா  ஆகியோர் கலந்து கொண்டனர்.

;