districts

img

அக்னிபாத் திட்டத்தை கைவிட கோரிக்கை இடதுசாரிகள் - வாலிபர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

தேனி, ஜூன் 20- வாலிபர்களின் வேலை வாய்ப்புக் கனவுகளை சீரழிக்கும் விதமாக பாஜக அரசு கொண்டு  வந்துள்ள அக்னிபாத் திட்டத்தை கைவிடக் கோரி மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி மற்றும் இந்திய ஜன நாயக வாலிபர் சங்கம், இடது சாரிக்கட்சிகள் சார்பில் ஆர்ப்பாட் டம் நடைபெற்றது. தேனி கூடலூரில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு கட்சியின் ஏரியாக்குழு உறுப்பினர் ஜிபி முரு கன் தலைமை வகித்தார். மாவட் டக்குழு உறுப்பினர் பி ஜெயன் ஆர்ப்பாட்டத்தை தொடக்கி வைத்து பேசினார். கூடலூர் ஏரியா செயலா ளர் பி.ஜெயராஜ் மற்றும் பலர் கலந்து கொண்டு முழக்கமிட்டனர். கம்பத்தில் நடைபெற்ற ஆர்ப்  பாட்டத்திற்கு ஈஸ்வரன் (மக்கள்  அதிகாரம்) தலைமை வகித்தார். கல்யாண சுந்தரம் (சிபிஐ), அறிவழ கன் ( பார்வர்டு பிளாக்),கே.ஆர்.லெனின், பி.முருகேசன், எஸ்.பன் னீர்வேல் (சிபிஎம்) ஆகியோர் பேசி னர். போடியில் திருவள்ளுவர் சிலை அருகில் மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் சார்பில் ஆர்ப் பாட்டம் நடைபெற்றது.மூத்த தலை வர் கே.ராஜப்பன், எஸ்.செல்வம், எஸ்.கே.பாண்டியன், பி.சந்திர சேகர், தங்கப்பாண்டியன், முனீஸ், சிபிஐ சார்பில் சத்யராஜ் ஆகி யோர் பேசினர். 

திண்டுக்கல் 
திண்டுக்கல் ரயில்வே ஜங்சன் முன்பு இந்திய ஜனநாயக வாலிபர் சங்க திண்டுக்கல் மாவட்டக் குழு  சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற் றது. ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்டத் தலைவர் எம்.சிலம்பரசன் தலைமை வகித்தார். மாநில இணைச் செயலா ளர் சி.பாலசந்திர போஸ், மாவட்டச் செயலாளர் கே.ஆர்.பாலாஜி, மாவட்டப் பொருளாளர் ஜி. கிருஷ்ணமூர்த்தி, மாவட்ட துணைச் செயலாளர் சேது சிவன், நகர் செய லாளர் பாலமுருகன், நகர் பொருளா ளர் அஜீத், மாணவர் சங்க மாவட்டச் செயலாளர் முகேஷ் உள்ளிட்டோர் பங்கேற்றனர். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் சார்பில் திங்களன்று திண்டுக்  கல் தலைமை தபால் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற் றது. ஆர்ப்பாட்டத்திற்கு கட்சியின் நகரச் செயலாளர் ஏ.அரபு முகமது  தலைமை வகித்தார். மாவட்டக் குழு  உறுப்பினர்கள் ஆசாத் அஜய், ஒன்றியச் செயலாளர் சரத்குமார் ஆகியோர் கலந்து கொண்டனர்.