districts

img

“தாயைப் போலவே தாய்மொழியும் சிறந்தது” “நட்ட கல்லும் பேசும் நம் நாட்டுப்புற மரபு”

 தேனி/சின்னாளபட்டி, பிப்.24- காந்திகிராம கிராமிய நிகர்நிலைப் பல்கலைக்கழகத் தமிழ்த்துறையின் சார்பில் உலகத் தாய்மொழி நாள் விழாக் கொண்டாடப்பட்டது. நிகழ் விற்குக் காந்திகிராம கிராமிய நிகர் நிலைப் பல்கலைக்கழகப் பதிவாளர் டாக்டர் வி.பி.ஆர்.சிவக்குமார் தலைமை வகித்தார். அவர் தமது உரையில், “தமிழைச் செம்மைப்படுத்துவதற்கும் மொழியை வளப்படுத்துவதற்குமான சிந்தனையைத் தூண்டும் நாள் தான் தாய்மொழி நாள். தமிழ்ச்சொற்கள் ஒவ்வொன்றும் இனிமையானவை. நம் உணர்வோடு கலந்தவை. தொடர்ந்து தமிழைப் பேசுவதின் மூலம்தான் தமிழ் மொழியின் இனிமையை உணர்ந்து கொள்ள முடியும். நம்மைப் பெற்றெடு த்து இந்தப் பூமியில் உலவ விட்ட தாயை எவ்வாறு மதிக்கின்றோமோ அப்படித்தான் நம் தாய்மொழியையும் போற்ற வேண்டும் என்றார்”.  தொடர்ந்து கோடைப் பண்பலை அகில இந்திய வானொலி நிலைய மேனாள் நிகழ்ச்சி இயக்குநர் முனை வர் சுந்தர ஆவுடையப்பன் பேசுகை யில், “தமிழ் ஒரு பேரழகான மொழி. அதன் பிள்ளைகள் நாம் என்பதில் பெரு மைகொள்வோம். தாய் மொழியில் பேசுவதும் எழுதுவதும் சிந்திப்பதும் நமக்குக் கிடைத்தவரம். ஒரு மொழி அழியாமல் பாதுகாப்பது அந்த இனத்தை அழிவிலிருந்து காப்பதற்குச் சமம்” என்றார்.
தேனி
தேனி அரசு மருத்துவக்கல்லூரி, மருத்துவமனை கூட்டரங்கில், தமிழ் இணை கல்வி கழகத்தின் சார்பில், கல்லூரி மாணவ, மாணவிகளுக்கான மாபெரும் தமிழ்க் கனவு தமிழ் மரபு மற்றும் பண்பாட்டுப் பரப்புரை சொற் பொழிவு நிகழ்வு வெள்ளிக்கிழமை  மாவட்ட ஆட்சியர் ஆர்.வி.ஷஜீவனா, தலைமையில் நடைபெற்றது. நிகழ் வில், “நட்ட கல்லும் பேசும் நம் நாட்டுப் புற மரபு” என்ற தலைப்பில் எழுத்தா ளர் ச.தமிழ்செல்வன், “கவிதை வழியே தமிழ் மனம்” என்ற தலைப்பில் எழுத்தா ளர் பவா செல்லத்துரை ஆகியோர் கருத்துரை வழங்கினர். நிகழ்வில் சிறப் பான கேள்விகளை எழுப்பிய மாணவ, மாணவிகளுக்கு பராட்டுச் சான்றிதழ் மற்றும் புத்தங்களை பரிசாக மாவட்ட ஆட்சியர் வழங்கினார். நிகழ்வி பேசிய ஆட்சியர், “கல்லூரி மாணவ-மாணவிகள் தமிழோடு பய ணிப்பது குறித்த இந்த சொற்பொழிவு கள் உங்களுக்கு உந்துதலைத் தரும். நமது தொன்மையான பாரம்பரி யம், தொன்மையான நாகரீகம், கலாச் சாரங்களை அறிய தொல்காப்பியம் சங்க இலக்கியங்கள் போன்ற நூல்க ளிலுள்ள விவரங்களை அறிந்து கொண்டு, தமிழை வளர்க்க அனைவ ரும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என என்றார். தேனி அரசு மருத்துவக்கல்லூரி முதன்மையர் அழ.மீனாட்சிசுந்தரம், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவி யாளர் (பொது) க.அன்பழகன் ஆகியோர் பங்கேற்றனர்.