districts

img

இறந்தவர்களுக்கு சடங்கு செய்ய சின்டெக்ஸ் தொட்டி நிறுவுக! பெரியகுளம் விசிக கோரிக்கை

 தேனி, மார்ச் 2- பெரியகுளம் ,தென்கரை பேரூராட்சி பகுதியில் இறந்த வர்களுக்கு சடங்கு செய்ய சின்டெக்ஸ் தொட்டி நிறுவ  வேண்டும் என  பெரியகுளம் நகராட்சி ஆணையரிடம் விடுதலை சிறுத்தைகள் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது. மாவட்ட செயலாளர் ப.நாகரத்தினம்,நாடாளுமன்ற தொகுதி செயலாளர் இரா.தமிழ்வாணன் ,நகர் செயலா ளர் ஜோதிமுருகன் ,மாவட்ட அமைப்பாளர் இரா.சேகு வேரா மற்றும் நகர பொருப்பாளர்கள் மணிபாரதி,பரமன்,  சக்திவேல், பா.ஜெயராஜ், ஆகியோர் பெரியகுளம் நக ராட்சி ஆணையர் புனிதனை சந்தித்து மனு அளித்தனர். அந்த மனுவில் தெரிவித்துள்ளதாவது:  பெரியகுளம் நகராட்சிக்குட்பட்ட வடகரை வார்டு எண் 10,11,12, தென்கரை வார்டுஎண்13,14,15,16 ஆகிய  வார்டுகளில் வசித்து வரும் ஆதிதிராவிடப் பொதுமக்கள்  மற்றும் அனைத்து தரப்பு மக்களும் தங்கள் பகுதிகளில்  ஏற்படும் இறப்பு நிகழ்வின்போது நீர் மாலை சடங்கிற் காக பெரியகுளம் தென்கரை மார்க்கெட் சாலையில் அமைந்துள்ள பிள்ளையார் கோவில் அருகில் உள்ள  நகராட்சி குழாயை பயன்படுத்தி வந்தனர். இந்நிலையில் கடந்த சில ஆண்டுகளாக மேற்படி பகுதியில் இருந்த நக ராட்சி குழாயை திட்டமிட்டு சிலர் உடைத்தெறிந்தும் கற்களை போட்டும் மூடிவிட்டனர்.அதனைத் தொடர்ந்து நடைபெற்ற சாலை விரிவாக்க பணியின் போது மேற்படி குழாய்கள் முழுவதுமாக மூடப்பட்டன. ஆகவே ஆதிதிராவிட சமூக பொதுமக்கள் நீர்மாலை  எடுக்க செல்லும்போது பணம் கட்டி டிராக்டர் மூலம் தண்ணீரை கொண்டு வந்து நீர் மாலை எடுத்து வந்தனர். மேலும் அருகில் உள்ள தெருக்களில் உள்ள சின்டெக்ஸ்  தொட்டியை பயன்படுத்துவதால்  தேவையற்ற பிரச்சனை களும் ஏற்பட்டு வந்தன. பெரியகுளம் நகர் பகுதியில் வசித்து வரும் ஆதிதிரா விடப் பொதுமக்களின் நலன் கருதி மார்க்கெட் சாலை பகுதி யில் நீர் மாலை எடுக்கும் பயன்பாட்டிற்கு சின்டெக்ஸ் தொட்டி அமைக்க வேண்டும். இவ்வாறு மனுவில் தெரி வித்துள்ளனர்.